வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

சூரிய விரதங்களும் விழாக்களும் - 1

சூரிய விரதங்களும் விழாக்களும் உலகெங்கும் வியாபகமாய், கண்னெதிரே காட்சியாய், உயிர்களுக்குத் தக்க சாட்சியமாய் விளங்கும் கதிரவன் தன்னை வழிபடும் உலகோர், சிறப்பாக இந்துக்கள் அக் கதிரவனை வழிபடும் முறைகளில், தம் நம்பிக்கை சார்ந்த வெளிப்பாடாக விரதங்களையும், விழாக்களினையும் கைக்கொண்டனர் எனலாம். அவ்வகையில் ஆவணி ஞாயிறு, தைப்பூசம், தைப்பொங்கல் போன்றனவற்றை இப்பகுதி ஆய்கிறது. 1 ஆவணி ஞாயிறு தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாதி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரதநாட்களாகும். ஆவணி மாதம் ஸ்திர மாதம். வைகாசி, கார்த்திகை, மாசி ஆகியவையும் ஸ்திர மாதங்களே. ஆனால் ஆவணியில் சூரியன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார். சூரியனே ஆத்மகாரகன் என்றும், பிதுர்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். அரசியல், பெரும் பதவி பெறுவதற்கான தகுதியை தர வல்லவர். இதன் காரணமாக சூரியன் வலுப்பெறும் போது எந்த காரியத்தை செய்தாலும் சிறப்பான பலனைத் தரும் என முன்னோர்கள் அறிந்திருந்தனர். எனவே தான் ஆவணி மாதத்தில் கிருஹப் பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் நீண்ட நாட்கள் தங்கலாம், திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும். விவசாயத்திலும் ஆவணி மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஆடிப் பட்டம் தேடி விதைக்கும் விவசாயிகள், ஆவணி மாதத்தில் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்வதுடன், ஒட்டுமொத்த வேளாண் மக்களும் தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்களை, விழாக்களை நடத்தி மகிழ்வர். ஜோதிட முறைப்படி பார்த்தால் சூரியன் வலுப்பெறுவதால் ஆவணி மாதத்தில் செய்யப்படும் அனைத்து செயல்களும் சிறப்பான பலனைத் தருவதால், ஆவணிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்று கூறலாம். ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் “ஞாயிறு” என்றாலே சூரியன். அது மட்டுமன்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை ஆறு முதல் ஏழு மணி வரை சூரிய ரேகையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் “ஞாயிற்றுக்கிழமை” முக்கியத்துவம் பெற்றது. சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், “ஆதித்ய ஹ்ருதயம்” சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

ஞாயிறு, 27 ஜூன், 2010

அத்வைதம்

இந்துக்கள் தம் சமய வாழ்வியல் உண்மைகளை வெளி உலகக் காட்சிகளையும் மாற்றங்களையும் விபரிப்பதனை விட, அகக் காட்சிகளையும் அணுவுக் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் உள்ள உண்மைப் பொருளை – ஆத்ம ஞானமாக - ஆத்மீகத் தேடலாக, அலசியும் விவாதித்தும் இந்து மத உண்மைகளை அறிய முயன்றனர். அவ் அறிவு முயற்சியில் சந்தேகத் தன்மையும், ஐயப்பாடும், தோன்றத் தோன்ற உண்மை பற்றிய தெளிவையும் முடிவையும் மேலும் வளர்த்துச் செல்ல இந்துக்கள் முயன்றனர். இதுவே தத்துவ ஞானத்தின் தோற்றுவாய், தத்துவ ஞானத்தின் தாயூற்று.
அறிவு வளர்வதற்கு அறிதல் காரணம் ஒன்றைப்பற்றி அறிவதாயின் அதைப்பற்றிப் பல கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை கூற முயல்வதின்றியமையாதது. ஒன்றை உள்ளவாறு கண்ணாரக் கண்டும் அது இதுதானா அன்றி வேறொன்றா எனவெல்லாம் கேள்விகளை எழுப்பத் தொடங்கினால் தான் அதைப்பற்றிய அறிவு விருத்தியடையும். அது, இதுதான் என்ற தெளிவும் உரியவாறு ஏற்படும். எனவே இவ்வாறு கேள்வி கேட்கும் நிலையில் சந்தேகம் தோன்றுதல் இயற்கை இவ்விதமான சந்தேக மனப்பான்மை அறிவை வளர்க்க உண்மை நிலையை அறிய – அதாவது தத்துவஞானம் தோன்ற அடிகோலுவது என்பர் தத்துவஞானிகள்.
(கைலாசநாதக்குருக்கள், வடமெழி இலக்கிய வரலாறு,)
என்ற கூற்றும்
தத்துவம் என்ற சொல்லுக்கு உண்மை என்பது பொருள். எனவே தத்துவ ஞானம் என்பது உண்மையை அறிவது எனப் பொருள்படும். உண்மை என்பதற்கு, உள்ளது. அதாவது, என்றும் உள்ளது என்பதே கருத்து. நம் உடல் உட்பட நாம் காணும் பொருள்கள்யாவும் என்றும் உள்ளவை அல்ல. என்றுமே உள்ள பொருள் ஏதாவது உண்டா? உண்டாயின், அது எது? அதன் இயல்புகள் எவை என்பன போன்றவற்றை ஆராய்வதே தத்துவ ஞானம் எனக் கூறலாம்.
(லஷ்மணன், கி இந்திய தத்துவ ஞானம், பக்:01)
என்ற கூற்றும், இந்து தத்துவத்தின் தோற்றுவாயை அறிந்து கொள்வதற்கு துணை போகின்றன.
இத்தகு பின்னணியினூடாக இந்திய தத்துவ ஞான வளர்ச்சியானது வேதம், உபநிடதம், வேதாந்தம், தரிசனங்கள், சித்தாந்தம், என்ற வளர் நிலையினைப் பெற்றுச் செல்வதனை நோக்க முடியும்.
'அந்தம்' என்ற சொல்லுக்கு, 'முடிவு' மற்றும் 'குறிக்கோள்' என்று இரண்டு அர்த்தங்கள் உண்டு. வேத நூல்களைப் பிரமாணமாகக் கொண்டு, அவை காட்டும் முடிவை ஏற்பது, வேதாந்தம் (வேத அந்தம்- வேதாந்தம்)
மேற்படி, வேதாந்த தத்துவ ஞான விருத்தியில் அத்வைதம் ஆற்றிய பணி அளவிடற்கரியது. சுருங்கச் சொல்லின் இந்திய தத்துவத்தின் ஆணிவேர் அத்வைதம் எனலாம்.
அத்துவிதம் முழுமுதன்மையான பிரம்மமே உண்மை பிறவெல்லாம் மாயை என்று வாதிடும் வேதாந்ததரப்பு. அ+த்வைதம் என்றால் இரண்டின்மை என்று பொருள். இக்கோட்பாட்டின் ஆதிகுரு ஆதிசங்கரர் எட்டாம் நூற்றாண்டில் கேரளத்தில் காலடி என்ற சிற்றூரில் பிறந்தவர். வேதாந்த மரபைச் சேர்ந்த சங்கரர் கௌடபாதர் என்பவரின் மாணவரான கோவிந்தரின் மாணவர். அத்துவிதத்துக்கு அடிப்படைகள் ரிக் வேதம் முதலே உள்ளன. உபநிடதங்களில் அவை கூர்மைப்பட்டன பாதராயணரில் இருந்து தொடங்கி அவரை நிராகரித்து மேலே செல்கிறார். பாதராயணரின் பிரம்ம சூத்திரம் பிரம்மம் தன்னிலிருந்து பிரபஞ்சத்தை உருவாக்குகிறது என்ற கொள்கை கொண்டது. இது வளர்ச்சிநிலை வாதம் (பரிணாமவாதம்) என்று சொல்லபடுகிறது. சங்கரர் அப்படி பிரம்மம் தன்னை இன்னொன்றாக்கினால் பிரம்மத்தின் முழுமுதல்தன்மை குறைவுபடுகிறது என்றார். ஆகவே அவர் பிரம்மம் எவ்விதத்திலும் மாற்றம் அடையாத முழுமுதன்மை என்று சொல்லி பிரபஞ்சம் அதன் மாயத்தோற்றமே என்று வாதிட்டார். இது உருமயக்கவாதம் (விவர்த்த வாதம்) எனப்படுகிறது. இதுவே பிரம்ம சூத்திரத்துக்கும் அத்வைதத்துக்கும் இடையே உள்ள முக்கியமான வேறுபாடாகும்.சங்கரர் சொல்வதென்ன என்ற வினாவுக்கு அவரது சில அடிப்படைசொற்றொடர்களை முன்வைப்பதே சிறந்த வழியாகும். ஏனெனில் சங்கரவேதாந்தம் மிகசிக்கலாக பற்பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவையனைத்தும் இணைந்த ஒன்றே இன்றைய அத்துவிதம்.
‘பிரம்மமே உண்மை. பிரபஞ்சம் பொய். உயிர் பிரம்மம். வேறு ஒன்றுமில்லை‘
[ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: ஜீவோ ப்ரம்மைவ நாபர:]
விவேக சூடாமணியில் சங்கரர் சொல்லும் விளக்கம் மேலும் திட்டவட்டமானது
‘நிரந்தரமானவையும் அழியக்கூடியவையுமான பொருட்களை வேறுபடுத்திக் கொண்டு பிரம்மம் மட்டுமே உண்மை என்றும் உலகம் மாயையே என்றும் அறிக”
அத்வைதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகளாவன,
1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-பிரும்மம்) அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.
2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.
3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா, ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.
4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.
இதுவரை பொதுவாக அத்வைதம் என்ற சொற் பொருள் பற்றி விவாதித்தோம் இனி, அத்வைதம் கூறும் பிரம்மம் பற்றி விளக்க முற்படும் போது, பிரம்மம் என்ற சொல்லின் பொருளினையும், அச்சொல் தத்துவ ஞான உலகில் எங்ஙணம் பயிலப் பட்டது. என்பதனையும் ஆழ்ந்து சிந்தித்தல் அவசியமாகின்றது.
'ப்ருஹம்' என்ற மூலச் சொல்லிலிருந்து வந்தது தான் பிரம்மம். 'ப்ருஹம்' என்றால், "வளருவது, விரிவடைவது, வளரச் செய்வது, ஊக்கமளிப்பது" என்று பொருள். "ப்ருஹதி இதி பிரம்மன்" – அதாவது, 'எது வளரச் செய்கிறதோ அது பிரம்மன்'.
பிரமம் என்பதற்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. எமக்கு எட்டியுள்ள நூல்களை எடுத்து நோக்குவோமேயானால் இதன் தொடக்கநிலை இருக்குவேதத்தில் இருக்கின்றதைக் காணலாம். மேலும்பிரமம் என்பது வேதம், தத்துவம், தவம் என்னும் கருத்துக்களை உடையது என நிகண்டு கூறும். வேதங்களில் முக்கியமாக இருக்கு வேதத்தில் வரும் இச்சொல் முதலில் சூக்தத்தையும், பின் வேதத்தையும் குறித்தது. பின்னர் இது பிராமணத்தையும், பிரணவத்தையும் குறிக்கலாயிற்று. இருக்கு வேதம் குறிக்கும் பிரமம் என்பது மந்திரம் எனக்கொள்ளப்படும் பாட்டுக்களையே சுட்டுகின்றது. இப்பாட்டுக்கள் தாம் வழிபடுதற்குப் பயன்படும் தோத்திரங்கள். இவை மந்திர சக்தி வாய்ந்தவை. எனவே இவற்றைக் கருவியாகக் கொண்டு வழிபடுபவர்கள் தெய்வங்களைத் தம்வயப்படுத்தித் தாம் வேண்டுவதை அடைய முற்படுவர். நாளடைவில் இம்மந்திரங்கள் தொகுதிகளாக்கப்பட்டன. இத்தொகுதிகள் ஒன்று சேர்க்கப்பட வேதம் உருவாயிற்று. இதே ‘திரயீவித்யா’ என்பது. ஈற்றில் இது பிரமம் எனப் பெயர் பெற்றது. வேதம், பிரமம் எனும் இவ்விருபெயர்களும் இதன் தெய்வத் தன்மையை உணர்த்துகின்றன. மேலும், வேதங்களிற் கூறப்படும் யாகமும் மனிதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட தெய்விக ஆற்றலையே குறிப்பது. வேத நெறி நிற்றலால் இவ்வகை ஆற்றலை ஒருவர் அடையலாம். வேதநெறி நிற்கவழி வகுப்பவை வேட்கும் வகையை அறிவுறுத்தும் பிராமணங்கள். இவ்வுயரிய அறிவாகிய வேதமே முதல் முதற்றோன்றிய பிரமம் எனவும், இதுதான் தோற்றம் அனைத்துக்கும் தோற்றுவாயாய் உள்ளது எனவும், இதை அடுத்துத் தோன்றியனவே படைத்தல் தெய்வமாகிய பிரமா என்னும் சுயம்புவைப் பற்றிய கருத்துக்கள் எனவும்கூறப்படும். இவ்வாறு பிரமம் என்னுஞ் சொல் மந்திரங்களை முதன் முதலிலும், மந்திரங்களின் தொகுதியான வேதத்தை அதன் பின்னரும், அங்கு கூறப்படும் யாகங்களையும், அவற்றின் தொடர்பு உடையவர்களையும். அவற்றினால் விளையும் சக்தியையும், படிப்படியாகக் குறித்து வந்ததைக் கவனிக்கும் பொழுது, பிரமம் என்னுஞ் சொல் உணர்த்தும் கருத்துக்களின்பல நிலைகள் தெளிவாகின்றன. உபநிடதங்கள் குறிக்கும் பிரமமோ எனின் அது எல்லாவற்றிற்கும் நிலைக்களனாகி எல்லாமாய் ஒரே தனிப் பொருளாய்த் தன்னைவிட வேறொன்றிலதாய் உள்ள பொருள் என்பது தெரிகின்றது.
என்ற கைலாசநாதக்குருக்களின் கருத்து பிரம்மம் என்ற சொல்வழக்கு, தோன்றி வளர்ந்த வாற்றை அறிய நன்கு உதவியுள்ளது எனலாம்.
சங்கர வேதாந்தமான அத்வைதம் போதிக்கும் பிரம்மம் புதிதாகச் சங்கரரால் வரையறுக்கப்பட்டதோ, அல்லது தோற்றுவிக்கப்பட்ட கோட்பாடோ, அல்ல. உபநிடதங்கள் பேசும் பிரமத்தின் திருந்திய வடிவம் எனலாம். உபநிடதங்களில் ரிஷிகளாலும் ஞானிகளாலும் விபரிக்கப்பட்ட அல்லது விவாதிக்கப் பட்ட பிரம்மம் பற்றிய கோட்பாட்டின் ஒரு வடிவத்தையே சங்கரர் பெரிதும் ஏற்றுள்ளார் எனக் கூறலாம்.

உபநிடதங்கள் பிரம்மம் பற்றிய சிந்தனையை ஆன்மா உலகுடன் தொடர்பு படுத்திப் பேசும் போது இரு வேறு தன்மையைப் பின்பற்றுகின்றன.
1) பிரம்மமும் ஆன்மாவும் வேறு வேறு என்னும் தன்மையது.
2) பிரம்மம் ஆன்மா ஒன்றே என்ற தன்மையது.
இவற்றுள் இரண்டாவதனையே சங்கரர் ஏற்றுக் கொள்கின்றார்.
அதாவது “அயம் ஆத்ம பிரம்ம” (இந்த ஆன்மா பிரம்மம்) என்ற ஞாக்ஞவல்கியர் கூற்றும், “தத்துவம் அஸி” (அது நீயே) எனும் உத்தலாகரின் கூற்றையுமே சங்கரர் தம் ஒருமை வாதக் கொள்கைக்கு அடிப்படையாக்கினார்.
எனவே சங்கராச்சாரியாரின் கருத்துப்படி உண்மையில் உள்ள பொருள் ஒன்று தான். உபநிடதங்களில் ஆன்மாவென்றும் பிரம்மம் என்றும் சுட்டப்படுவது எதுவோ அதுவே உள்ள பொருள் அது பூரண ஞானமே சொரூபமானது (ஞான சொரூபம்) வேறு வகையில் சொல்வதாயின் அதன் சுபரூபம் ஞானமாகும். (சொரூப ஞானம்) அது குணங்களற்றது. (நிர்குணம்) அதற்கு விசேட இயல்புகள் எவையும் இல்லை, (நிர் விஷேடம்) பிரம்மம் மாயையாகிய தனது சக்தியோடு இணைந்துள்ளது. மாயையை மூலவித்தை எனவும் குறிக்கலாம். நிர்குண பிரம்மம் மாயை காரணமாக குணங்கள் உடையதாக (சகுணப் பிரம்மம்) தோன்றுகின்றது. இந்நிலையில் பிரம்மம் சகுணப் பிரம்மம், சவிசேடப் பிரம்மம், அபரப் பிரம்மம் என்ற பெயர்களால் வழங்குகின்றது.
சங்கரர் பிரம்மம் பற்றிய கருத்துருவாக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ஏனைய தத்துவங்கள் தத்துவ வாதிகள் ஆராயும் பிரம்மம், ஆன்மா, உலகு, ஆகிய முப்பொருள்களையே தன் தத்துவ ஆராச்சியிலும் ஈடுபடுத்தி முப்பொருட்களில் “பிரம்மம்’’ மட்டுமே சத்தியமான (சத்து) பொருள் உலகு, ஆன்மா என்பன பிரம்மத்தின் தோற்றமே அன்றி உள்பொருள் அல்ல என்ற முடிவுக்கு வருகின்றார். எனவே சங்கரர்
பிரம்மம் தான் உண்மையான பொருள் இந்த உலகம் ஒரு தோற்றமே. ஒவ்வோர் ஆன்மாவும் பிரம்மம் தான் வேறொன்றுமில்லை என்கின்றார். பிரம்மத்தின் இருமையற்ற நிலை, உலகத்தின் உண்மையற்ற நிலை, பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபாடான நிலை இவையே அத்வைதம் போதிக்கும் உண்மைகள்.
பிரம்மம் உள் பொருள் என்பதனையும் அதன்பரிபூரணத் தன்மையை விளக்கி அதன் தோற்றமே உலகு என்பதைத் தெளிவு படுத்த அவர் கையாண்ட வாதம் விவர்த்த வாதம்.
பாதராஜணர் கூற்றுப் படி பிரம்மமும் உள் பொருள் உலகமும் உள்பொருள். பிரம்மம் தான் உலகாக மாற்றம் அடைந்துள்ளது. பிரம்மம் மாறுவதாகத் தோன்றுவது மட்டும் அல்ல. அது உண்மையாகவே மாறி உலக சிருட்டி நிகழ்கின்றது. இத்தகைய மாற்றம் பரிணாமம் எனப்படும். பால் மாறித்தயிராவது இதற்கு நல்ல உதாரணம். இதிலே காரணமும் உண்மை. காரியமும் உண்மை. பாலும் உண்மை, தயிரும் உண்மை. காரணமாகிய பிரம்மமும் உண்மை. அதிலிருந்து தோன்றும் காரியமாகிய இவ்வுலகமும் உண்மை. பிரம்மம் உண்மையாகவே மாறி உலகமாகின்றது. எனவே, இதனைப் “பிரம்ம பரிணாமவாதம்” என வழங்குவதுமுண்டு.
மேலும் பரிணாமவாதத்துக்கு நேர்மாறாகப் பௌத்தர்களுள் ஒருசாரார், காரணமும் உண்மை அல்ல, காரியமும் உண்மை அல்ல. பிரம்மமும் இல்லை. உலகமும் இல்லை. உண்மையில், உள்ளது ஒன்றும் இல்லையென்று கருத்துப் படும்படி “சூனியவாதம்” என்ற ஒன்றப் பேசுகின்றனர். எனவே, ஒரு புறம் காரணமாகிய பிரம்மம் எவ்வளவு உண்மையோ அவ்வளவு தூரம் காரியமாகிய உலகமும் உண்மை என்னும் பரிணாமவாதம். மறுபுறம் இரண்டுமே உண்மையல்ல என்னும் சூனியவாதம். இடையில் இவையிரண்டையும் மறுக்கும் தேவை சங்கரருக்கு ஏற்படுகிறது.
பிரம்மம் சித்துப் பொருள். அதாவது, அறிவே சொரூபமான பொருள். ஆனால், இவ்வுலகம் சடப்பொருள். இது அறிவுக்கு நேர்மாறான பொருள். அறிவே மயமான ஒன்றிலிருந்து அறிவுக்கு நேர் மறுதலையான ஒன்று தோன்றிற்று என்பது பொருந்தாது. இச்சடவுலகுக்கு மூலமும் ஒரு சடப்பொருள்தான். அதிலிருந்தே பிரம்மம் இவ்வுலகைத் தோற்றுவித்தது எனக் கொண்டால், பிரம்மம் மட்டுமல்ல மூலப்பொருள். பிரம்மத்தோடு போட்டியிடக்கூடிய சிறப்பையுடைய வேறு ஒரு மூலப்பொருளும் உளது. ஆகவே, மூலப்பொருள் ஒன்றல்ல, இரண்டு என்ற நிலைமை ஏற்படுகின்றது. மூலப்பொருள் ஒன்றே என்ற உபநிடதக் கூற்றுக்கு இது விரோதமாகும். இதனால், பிரம்மத்தின் மகிமையும் குறையும். இந்த இரண்டாவது மூலப்பொருள் பிரம்மத்துக்குப் புறம்பான ஒன்றல்ல. பிரம்மத்தினுள் அடங்கிய ஒன்றுதான் அது எனில், அது பிரம்மத்தின் ஒரு பகுதியாதல் வேண்டும். அல்லது பிரம்மம் முழுதுமே அது ஆதல் வேண்டும். இவையிரண்டும் பொருந்தா. பிரம்மத்தின் ஒரு பகுதியே சடவுலகுக்கு மூலப்பொருள் எனில், சித்துப் பொருளாகிய பிரம்மமும் சடப்பொருளைப் போலப் பகுதிகளையுடையது என்ற நிலை ஏற்படுகின்றது. பகுதிகளையுடைய பொருளெதுவும் அழியும். எனவே, பிரம்மமும் அழியும் எனல் வேண்டும். இது பொருந்தாது. பிரம்மம் முழுதுமே உலகுக்கு மூலமாகிய சடப்பொருள் எனக் கொண்டால் பிரம்மம் உலகாக மாறி உலக சிருட்டி ஏற்பட்ட பின், பிரம்மம் என்று எதுவும் இலதாகும். எனவே, இதுவும் பொருந்தாது. எனத் தக்க காரணம் காட்டி மறுத்த சங்கரர், விவர்த்தவாதம். எனும் வாதத்தை முன்வைத்து, பிரம்மமே ஒன்றாயும் பலவாயும் இருக்கின்றது என்பது பொருந்தாது, எனக் கூறி பிரம்மம் தானாயும் ஒன்றாயும் இருப்பதே உண்மை என்கிறார்.
ஒரு பொருள் இன்னொன்றாக மாறாமலிருந்தபடியே மாறிவிட்டதாகக் காணப்படுவதற்கு விவர்த்தவாதம் என்று பெயர். உதாரணமாக கயிறு பாம்பாகக் காணப்படுவதைக் கூறலாம். வேதாந்திகள் அதிகமாக கையாளுவதும் இந்த உவமையையே. கயிறு பாம்பாக உண்மையில் மாறவில்லை. ஆனால், உரு மயக்கம் காரணமாக மாறிவிட்டதாகக் தோன்றுகிறது. அது போலவே, பிரம்மமும் உண்மையில் உலகாக மாறாமலே மாறிவிட்டதாகக் தோன்றுகிறது. இதன்படி காரணம் மட்டுமே உண்மை அக்காரணத்திலிருந்து வரும் காரியம் உண்மையல்ல. காரணமாகிய கயிறு உண்மை. அதிலிருந்து தோன்றிய காரியமாகிய பாம்பு உண்மையல்ல. காரணமாகிய பிரம்மம் உண்மை. அப்பிரம்மத்திலிருந்து தோன்றிய காரியமாகிய உலகம் அவ்வளவு உண்மையல்ல (வெறும் தோற்றமே) என்கிறது விவர்த்த வாதம்.
பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபாடான நிலை பற்றிக் குற்ப்பிடும் போது பிரதிவிம்ப வாதம், அவச்சேத வாதம் ஆகிய இரு வாதங்களை முன் வைக்கின்றார். பிரதி விம்பம் என்பது ஒன்றினது பலவான தோற்றம் எனலாம். அதாவது ஒரு பொருள் பிரதிபலிக்கக் கூடிய மேற்பரப்பில் பட்டுப் பலவாகத் தென்படல். உதாரணமாக வானத்தில் தென்படும் சந்திரன் ஒன்றே ஆனால் அது புவியில் உள்ள பல நீர்நிலைகளில் பட்டுப் பலவாகத் தென்படுகின்றது. அது போன்றே பிரம்மம் மட்டுமே உள்ள பொருள் அது அவித்தை (மாயை) காரணமாக பலதாகத் தென்படுகின்றது. எங்ஙனம் நீர்நிலைகளை நீக்கும் போது சந்திரன் ஒன்றே உள்ள பொருளாகின்றதோ அங்ஙனமே அவித்தை விலகும் போது பிரம்மம் மட்டுமே உள்ள பொருளாகின்றது.
அவச்சேத வாதத்தினுடாகவும் பிரமத்தின் பரிபூரணத் தன்மையினையும், உள் பொருட் தன்மையினையும், பிரம்மத்திலிருந்து ஆன்மா வேறுபாடான நிலையினையும் எடுத்துக் காட்டத் தவறவில்லை. ஒரு பரந்த வெளி பல தடுப்புக்களால் தடுக்கப்பட்டு பலவாகத் தென்படுகின்றது அது போல் உள்ள பொருளான பிரம்மம் அவித்தை (மாயை) காரணமாக பலதாகத் தென்படுகின்றது. எங்ஙனம் தடைகள் நீக்கும் போது வெளி ஒன்றே உள்ள பொருளாகின்றதோ அங்ஙனமே அவித்தை விலகும் போது பிரம்மம் மட்டுமே உள்ள பொருளாகின்றது.
மேலே பிரம்மமே உலகமாகத் தோன்றுகின்றது எனக் குறிப்பிட்டோம். இங்கே பிரம்மமே உயிர்களும் ஆகின்றது எனக் காண்கின்றோம். ஆனால், பிரம்மம் உயிர்கள் ஆவதற்கும், பிரம்மம் உலகம் ஆவதற்கும் வேற்றுமையுண்டு. அதாவது மேலே குறிப்பிட்ட கயிறு பாம்பாகத் தோன்றும் உவமையில், உண்மை தெரிந்ததும் அங்குப் பாம்பு என்னும் பொருளுக்கே இடமில்லை. ஒரு வெண்ணிறப்பூவை ஒரு செந்நிறக் கண்ணாடி வழியாகப் பார்க்கும்போது அப்பூவும் செந்நிறப் பூவாகவே தோன்றுகின்றது. இங்கே உண்மை தெரிந்ததும் பாம்பு இல்லாதது போலப் பூ என்ற பொருளும் இல்லாது போகாது. அதன் ஓர் இயல்பு மட்டுமே இலதாகும். கயிறு பாம்பாகின்றபோது பொருளே மாறுகின்றது. ஆனால், வெண்ணிறப்பூ செந்நிறப்பூ ஆகின்றபோது பொருள் மாறவில்லை. அதன் ஓர் அமிசம் மட்டும் மாறுகின்றது. கயிறு பாம்பாகத் தோன்றும் உவமை பிரம்மம் உலகமாகத தோன்றுவதை விளக்குகின்றது. வெண்ணிறப்பூ செந்நிறப்பூவாகத் தோன்றும் பிரம்மம். சீவனாவதை விளக்குகின்றது. முதல் உவமையில் பொருள் ஒன்று அல்ல. ஆனால், இரண்டாவது உவமையில் பொருள் ஒன்று. இயல்புதான் வித்தியாசம். இதிலிருந்து பிரம்மமும் சீவர்களும் ஒன்றே என்பதும், இயல்பிலேதான் வித்தியாசம் என்பதும் புலனாகும்.
பிரம்மம் உலகு, ஆன்மா வாகத் தோன்றுவதற்கு முறையே மாயை, அவித்தை என்பன காரணம் என்கின்றார்.
சங்கரர் பேசும் மாயையை விளங்கிக்கொண்டால்தான் வேதாந்தத்தை விளங்க முடியும். ஆனால், சங்கரர் மாயை என்ற சொல்லை ஒரேயொரு கருத்தில் மட்டும் வழங்கவில்லை. பல கருத்தில் வழங்குகின்றனர். எல்லையில்லாத ஒன்றை எல்லைப்படுத்துவது, உருவம் இல்லாத ஒன்றை உருவமுடையதாக்குவதுமாகிய தத்துவமே மாயை எனப்படும். பிரம்மம் பூரணமானது. அதன் பூரணத்துவம் குறைவதால் ஏற்படும் விளைவே இவ்வுலகமும் உயிர்களும். பூரணமான பிரம்மத்தின் பூரணத்துவத்தைக் குறைக்கும் தத்துவமே மாயை. இது பிரம்மத்தோடு சேர்ந்ததோ அல்லது பிரம்மத்துக்குப் புறம்பானதா என்ற வினாக்களுக்கு விடை கூறுவது அரிது. மாயை பிரம்மத்துக்கு வேறானது என்பது பொருந்தாது. பிரம்மத்துக்கு வேறானது அல்ல என்பதும் பொருந்தாது. ஆனால், பிரம்மம் பரிபூரணமான நிலையில் மாயைக்கு இடமில்லை. பிரம்மம் பரிபூரணத்துவம் குறையத் தொடங்கும் நிலையிலேதான் மாயை இடம் பெறுகின்றது. மேலே கூறியபடி பிரம்மம் தன் பூரணத்துவத்திலே குறைவதற்கு இம்மாயைதான் காரணம். பிரம்மம் தனது நிறைவு குறையத் தொடங்கும் இந்த நிலையைத்தான் வேதாந்திகள் ஈசுவரன் என வழங்குகின்றனர். எனவே, வேதாந்தத்திலே பிரம்மத்துக்கு இரு நிலைகள் பேசப்படுகின்றன. ஒன்று, மாயையோடு சேர்ந்த நிலை. மற்றது மாயையோடு சேராத நிலை. மாயையோடு சேர்ந்த பிரம்மத்துக்குத்தான் ஈசுவரன் என்று பெயர். மாயையோடு சேராத நிலையே உயர்ந்தது. அதுவே குணங்கள் யாவும் கடந்த நிலை. அதனாலேதான் அந்த நிலையை வேதாந்திகள் நிர்க்குணப் பிரம்மம் என்கின்றனர். நிர்-குணம் என்றால் குணங்கள் இல்லாதது என்று பொருள். பிரம்மம் குணங்களைக் கடந்த இந்த உயர்ந்த நிலையிலிருந்து ஒருபடி கீழே இறங்கிக் குணங்களோடு சேர்கின்றது. இந்நிலையில் அதனைச் சகுணப் பிரம்மம் என்பர். சக-குணம் என்றால் குணங்களோடு கூடியது என்று பொருள். சகுணப் பிரம்மந்தான் ஈசுவரன். எனவே, வேதாந்தத்திலே ஈசுவரனுக்கு மிக உயர்ந்த இடம் கொடுக்கப்படவில்லை என்பது புலனாகின்றது.

மாயை என்பதை வேதாந்திகள் அனுபவமாகக் கொள்வர். இது பிரமத்தைப் போல சத்துப் பொருளும் அல்ல. முயற் கொம்பு, ஆகாயத்தாமரை போன்று அசத்துமல்ல. அது “சதசத் விலஷணம்” எனப்படும். மாயை என்பது உள்ளது மல்ல இல்லாததும் அல்ல அது ஓர் அநிர்வசனியம்.
அநிர்வசனியம் என்பது அ+நிர்வசனியம் எனப் பிரித்து, உள்ளதும் அல்ல, இல்லாததும் அல்ல எனப் பொருள் கொள்ளப் படுகின்றது.
ஈஸ்வரனின் சக்தி என்ற அர்த்தத்திலும் மாயை என்ற சொல் வழங்குகின்றது. இந்த மாயைக்கு இரண்டு இயல்புகள் உண்டு.
1)உள்ளதை மறைக்கும் இயல்பு.
2)இல்லாததைத் தோற்றுவிக்கும் இயல்பு.
உள்ளதை மறைக்குமியல்பு ஆவரணம் எனப்படும். இல்லாததைத் தோற்றுவிக்குமியல்பு விஷேபம் எனப்படும். மாயை ஆவரண சக்தியினால் மெய்ப்பொருளாகிய பிரம்மத்த மறைக்கின்றது. விஷேப சக்தியினால் உலகத்தைத் தோற்றுவிக்கின்றது. பிரம்மம் ஆன்மாவாக தோன்றுவதற்கு அவித்தை காரணம் என்பர் சங்கரர். வித்தை என்பது அறிவு என்னும் தன்மையால், அ+வித்தை என்பதற்கு அறிவு அற்ற தன்மை (அறியாமை) எனப் பொருள் கற்பிக்கப் படுகின்றது. மாயை என்பதும் அவித்தை என்பதும் அடிப்படையில் பிரமத்தின் தோற்றத்தை மாற்றுகின்றது. எனினும், அவற்றுக்கிடையில் வேறுபாடு உண்டு. தொகுதியாயிருக்கும்போது மாயை என்ற பெயரையும், அதே மாயை பிரிந்து ஒவ்வொரு ஆன்மாவையும் பாதிக்கும்போது அவித்தை என்ற பெயரையும் பெறுகின்றது மாயை ஈசுவரன் தோன்றக் காரணம். அவித்தை ஆன்மா தோன்றக் காரணம். எனினும் மாயை ஈசுவரனைப் பாதிப்பதில்லை. ஆனால், அவித்தை ஆன்மாகளைப் பாதிக்கின்றது. இது இவற்றுக்கிடையேயுள்ள மற்றொரு வேற்றுமை.
இவ்வாறாகச் சங்கரர் தன் அத்வைதக் கோட்பாட்டில் ப்ரம்ம சத்ய : ஜகன் மித்ய: எனும் ஒப்பற்ற உண்மையினைத் தெளிவு படுத்தி உள்ளார் எனலாம்.







01) கைலாசநாதக்குருக்கள், கா. “வடமொழி இலக்கிய வரலாறு”, நர்மதா வெளியீடு, சென்னை, 1981.
02) கைலாசநாதக்குருக்கள், கா. “இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்”, தமிழியல், சென்னை, 1986, பக் 17.
03) கோபாலகிருஷ்ணஐயர்,ப. “இந்துசமயம் காட்டும் ஆன்மீக வாழ்வு” ஷேஸ்திர (வயல்) விநாயகர் ஆலயம், முன்னேஸ்வரம், சிலாபம், இலங்கை.
04) லஷ்மணன், கி. “இந்திய தத்துவ ஞானம்”, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை,
05) ஹிரியண்ணா “இந்திய மெய்யியல்”, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

06) மகாதேவன்,ரி,எம்,பி. “இந்து சமயத் தத்துவம்”, குமரன் புத்தக இல்லம் சென்னை,2000

07) கந்தசாமி, சோ.ந, “இந்திய தத்துவக் களஞ்சியம்”, மெய்பப்பன் பதிப்பகம், சிதம்பரம், (2004).

08) இராசமாணிக்கம்,ச. “ஆதிசங்கரர் அருளிய அத்வைத தத்துவம்”
crhj;Jiz E}y;fs;.

வியாழன், 24 ஜூன், 2010

வேதாந்திகளின் வாழ்வும் சாதனைகளும்.

இந்து மதம் தன் இன்றைய நிலையைக் காலம் தோறும் தோன்றிய ஞானிகள், தத்துவ வாதிகள், குரவர்கள், ஆச்சாரியர்கள் போன்றோரின் அனுபவத்தினால் அடைந்துள்ள தெனலாம். அவ் வகையில் குரு என்பதன் பொருள் விளக்கத்தை நோக்கி, ஆச்சாரியாருக்கும் குரவருக்குமான பொருட் தொடர்பைக் கிரகித்து, தத்துவ ஆசாரியர்களில் மூவகை வேதாந்திகளின் வரலாற்றையும் சாதனைகளையும் கிரகிப்போம்.


“குரு பிரம்மா குரு விஷ்ணோ,
குரு தேவோ மஹேஸ்வரஹா,
குரு சாக்ஷாத் பரப்ரும்மம்
குரவே நமஹா! ”

குருவானவர் அனைத்துக்கும் மேலானவர், அவரே பிரம்மா, அவரே விஷ்ணு, அவரே மஹேஸ்வரன், மேலும் அந்தக் குருவே சாக்ஷாத் பரப்ரம்மம் என்று கூறும் மேற்கண்ட ஸ்லோகத்தை அறியாதோர் இருக்க முடியாது. அப்படிப் பட்ட குருவானவர் வயதானவராகவோ, சகலமும் கற்று அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்பது இல்லை. வயதிலே சிறியவராய்க் கூட இருக்கலாம், இவர் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்தாகவேண்டும் என்பதாய்க் கட்டாயம் ஏதும் இல்லை. தன்னுள்ளே தன்னை அறிந்தவராய் இவர் இருப்பதாலேயே இவரைக் குருவாய் ஏற்றிருப்பார்கள். உபதேசமும் செய்யவேண்டும் என்பதும் இவரிடம் எதிர்பார்க்கவேண்டியது இல்லை. இவரைப் பற்றிய மஹிமை நன்கு தெரிந்தவர்களும், அறிந்தவர்களுமே இவரைக் குருவாக ஏற்பார்கள். அப்படியான குருவானவர் பலரும் இருந்தாலும் ஆதிகுரு என்று அனைவராலும் சொல்லப் படுபவர் தட்சிணாமூர்த்தியே ஆவார். வயதில் மிக இளைஞன் ஆன இவர் வாய் திறந்து ஏதும் பேசவில்லை. தன் கைச் சின்முத்திரை ஒன்றே தன் சீடர்களுக்கு, அதாவது தன்னைக் குருவாய் வரித்தவர்களுக்கு அவர் சொல்லும் ஒரே போதனை! இவரைக் குருவாய் வரித்தவர்களோ, வயது முதிர்ந்த ரிஷிகள். அவர்கள் இவரிடம் பாடம் ஏதும் கேட்கவில்லை, இவரும் சொல்லவில்லை. மெளனமே மொழியாக அனைத்தும் அறியப் பட்டது, உணரப் பட்டது. குருவானவர் இவரே. எனினும் குரு பேசவும் செய்யலாம், அதே சமயம் உபதேசமும் செய்யலாம், அது சீடர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே அமையும். நம்முடைய மனத்தின் இருளைப் போக்கி ஆத்ம ஞானத்தை அறியச் செய்பவரே குரு என்று சொல்லவேண்டும்.

ஆனால் ஆச்சாரியர் என்பவர் வேறு. அவர் தாம் அனைத்தும் அறிந்தவராய் இருந்தாலும், வாழ்க்கை நியதிக்கு ஏற்ப, வாழ்க்கையின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அதன்படி நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு, நல்லுபதேசங்களைச் சீடர்களுக்கு உபதேசித்துக் கொண்டு இருப்பார். தான் சிஷ்யர்களுக்குப் போதிக்கும் அதே வழிமுறைகளைத் தானும் ஏற்கெனவே பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பவரே ஆச்சாரியர் என்பார்கள். சிஷ்யர்களையும் அதே வழிமுறையில் நடக்கச் செய்பவரே ஆச்சாரியர். இந்த முறையில் பார்த்தோமானால் குருவுக்கும், ஆச்சாரியருக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தாலும், பொதுவாக நாம் அனைவரையும் குரு என்றே அழைக்கின்றோம்.



அதிலும் சில ஆச்சாரியர்கள் அனைத்தையும் கடந்தவர்களாக, ஆத்ம ஞானம் பெற்றவராக, தம்முள் தம்மை உணர்ந்தவராக இருந்தாலும் வெளியில் பார்க்கும்போது அது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களைக் குரு எனச் சொல்லலாம். அப்படிப் பட்ட குருக்களிடம் சிஷ்யர்கள் தாங்களாகவே விருப்பத்தின் பேரில் வந்து இணைவார்கள். இந்தக் குரு எதையும் போதிக்காவிட்டாலும் இவரின் அருள் இருந்தாலே போதும் என நினைத்தும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களையே நாம் "ஸ்வயம் ஆச்சாரியர்கள்" என்று அழைக்கின்றோம். இப்படி குருவாகவும், ஆச்சாரியர்களாகவும் திகழ்ந்தவர்கள், நம் சநாதன தர்மத்தில் பலர் இருந்தாலும், பெரும்புகழ் பெற்றுக் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தவர் மூவர் ஆவார்.
அவர்களில் ஆதிகுரு என்றும், காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பாதயாத்திரையாகவே சென்று தம் கொள்கையான அத்வைதத்தைப் பரப்பியவரும் ஒரு ஆச்சார்யன் எவ்வாறு நடக்கவேண்டுமோ அவ்வாறே நடந்து காட்டியவரும், தனது நான்கு முக்கிய சீடர்கள் மூலம் தனது குரு பரம்பரையை உருவாக்கியவரும் ஆன "ஆதிசங்கரர்" என்பவரே முதல் ஆச்சாரியரும், குருவும் ஆவார். இவரிடம் சிஷ்யர்கள் உபதேசம் பெறச் சேர்ந்தாலும் இவர் குருதான், தம்மில் தம்மை உணர்ந்தவரே, வேதவித்து, ஞானி, சாட்சாத அந்தப் பரப்ரும்ம சொரூபன் ஆன ஈசனின் அம்சம் என்றும் சொல்லப் படுவார். அதே சமயம் "ஸ்வயம் ஆச்சாரியர்" ஆகவும் ஆனார் என்றும் சொல்லப் படுவார். ஒரே சமயம் ஒரு ஞானகுருவாகவும், சிஷ்யர்களுக்குப் போதிக்கும் ஆச்சாரியனாகவும் திகழ்ந்தவர்களில் இவர் முதன்மையானவர்.

அடுத்து வருபவர் "ராமானுஜாச்சாரியார்" இவரின் "விசிஷ்டாத்வைதம்" வழிமுறைகளை இவரும் ஒரு குருவாகவும், அதே சமயம் ஆச்சாரியராகவும் இருந்து உபதேசித்திருக்கின்றார். 74 சீடப் பரம்பரையை இவர் பெற்றிருப்பதாய்ச் சொன்னாலும் வைஷ்ணவ குருபரம்பரையானது இவரிடம் இருந்து பிரிந்து பல்வேறு வழிமுறைகளில் சென்று விட்டதாயும் சில வைஷ்ணவர்களின் திடமான எண்ணம். எனினும் இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவரும் தம் சிஷ்யர்களுக்குத் தம் வாழ்க்கையின் மூலமும், தன் ஞானத்தின் மூலமும் பல்வேறு போதனைகளைச் செய்தார். வைணவ பரம்பரையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும் ஆவார்.

அடுத்து வருபவர் மாத்வாசாரியார். இவரின் "த்வைதம்" தத்துவத்தால் வைணவத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே இன்று மாத்வர்கள் என அழைக்கப் படுகின்றார்கள். இவர் எட்டுமடங்களை ஸ்தாபித்ததாயும் அதன் மூலம் தன் தத்துவங்களை உலகு அறியச் செய்ததாகவும் சொல்லுவார்கள். இவரும் ஒரு ஆச்சாரியராகவும், குருவாகவும் இருந்தே தன் கருத்துக்களைப் பரப்பி வந்திருக்கின்றார். இவரும் ஒரு ஸ்வயம் ஆச்சாரியரே ஆவார். இவர்கள் தவிர, சிருங்கேரி மடப் பீடாதிபதி ஆன வித்யாரண்யர், ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், மற்றும் வைணவப் பரம்பரையில் வந்த வல்லபாச்சாரியார் போன்றோரையும் சொல்லுவதுண்டு.

ஆதி சங்கரரின் வரலாறும், சாதனைகளும்
ஆதி சங்கரர் தென்னிந்தியாவில் கேரள நாட்டில் காலடி எனும் ஊரில் கி.பி. 788 இல் நம்பூதிப்பிரமண குலத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சிவகுரு. தாயின் பெயர் விஷிஷ்டா (ஆசிரியாம்பாள்). இவர் தனது நான்காவது வயதில் தந்தையை இழந்தார். சங்கரருக்கு எட்டாவது வயதில் உபநயனம் நடைபெற்றது. பதினாறு வயதிற்குள் சகல கலைகளையும் கற்று ஆறு தரிசனங்களிலும் வல்லவரானார். நர்மதை நதிக்கரையில் கௌடபாதரின் சீடான கோவிந்த பகவத் பாதரைச் சந்தித்து அவருடைய சீடரானார். குரவின் உத்தரவுப்படி வேதாந்த சூத்திரத்திற்கு உரை எழுதினார்.
இமயம் முதல் கன்னியாகுமரிவரை காஷ்மீர் முதல் காமரூபம் வரை கால்நடையாகவே யாத்திரை மேற்கொண்டார். வாதத்தில் எதிரிகளை வென்று தர்மக் கொடியை நிலை நாட்டினார். பூர்வ மீமாம்சை மதத் தலைவரான குமாரிலபட்டரின் சீடரான மண்டன மிரரரையும் அவர் மனைவி உபயபாரதியையும் வாதில் வென்று மண்டன மிசிரரைத் தன் சீடராக்கினார். சுங்கரருடன் எதிர்வாதம் புரிந்தவர்களில் பலர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் எல்லோரும் பின்னர் சங்கரரையே பின்பற்றலாயினர். சங்கரர் மறைமுக பௌத்தர் எனவும் அழைக்கப்பட்டார்.
அத்வைத வேதாந்தக் கொள்கைக்கு நிலையான அத்திவாரமிட்டபின் சங்கரர் பாரதத்தின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார் அவையாவன:-



சங்கரரின் சிஷ்ய பரம்பரை “தசநாமிகம்” எனப் பத்து வகைப்படும். ஆவர்களுக்கு கிரி, பூரி, பாரதி, ஸரஸ்வதி, தீர்த்த ஆச்ரம், வன, அரண்ய, பர்வத. ஸாகர எனப்பட்டப் பெயர்கள் உண்டு.
சங்கரர் இயற்றிய நூல்கள்
சங்கரரின் நூல்கள் பிரகரணக் கிரந்தங்கள் எனப்படும் அவையாவன:
1. விவேகசூடாமணி
2. அபரேஷானுபூதி
3. தட்சணாமூர்த்தி தோத்திரம்
4. ஆனந்தலகரி
5. சொளந்தரியலகரி
6. ஆரியாசதகம்
7. பஜகோவிந்தம்
8. விவேக சூடாமணி
9. உபதேச சாயஸ்ரி
10. சிவானந்தலகரி
இவற்றுடன் அன்ன பூர்ணாஸ் தோத்திரம், சிவநாமவளி. லக்ஷ்மி நரசிம்மஸ்தோத்திரம், காலபைரவ அஷ்டகம், மநீஷா பஞ்சகம், மாத்ருகா பஞ்சகம், சுப்பிரமணிய புஜங்கம், கனகநாஸ்தவம் வேதசார சிவஸ்தம், ஆத்ம போதம், விஷ்ணுசகஸ்ரநாம பாஷியம், உபதேசஸாஹஸ் ரீ, ஹஸ்தமலகிய பாஷ்யம் என்பன போன்றவற்றையும் எழுதியுள்ளார்.
சங்கரர் இயற்றிய உரைகளாக ஈச, கேன, கட, பிரஸ்ன, முண்டக, மாண்டூக்ய, ஜதரேய, தைத்திரீய, பிருகதாரணியக சாந்தோக்கிய ஆகிய தசோபநிடதங்களுடன் பிரம்ம சூத்திரம், பகவத்கீதை என்பவற்றிற்கும் உரை எழுதியுள்ளார்.
சங்கரர் ஆற்றிய அற்புதங்களாக
லட்சுமி தேவியை நோக்கி கனனதாராஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பொழியச் செய்தமை.
ஊமைச் சிறுவனைப் பேசச் செய்தமை.
பூர்ணா நதியைத் திசைமாறி ஓடச் செய்தமை.
ஓர் இளைஞனின் தொழு நோயைக் குணப்படுத்தியமை.
தாய்க்கு விஸ்ணு தரிசனம் கிடைக்கச் செய்தமை.
தாயின் தகனக்கிரியைகளுக்காகத் தனத வலது கையிலிருந்து அக்கினியை உருவாக்கித் தகனக் கிரியைகளை முடித்தமை.
கேதாரத்தில் தனது சீடர்களுக்காக வெந்நீரூற்று உருவாக்கியமை.
சங்கரர் மேற்கொண்ட சமயச் சீர்த்திருத்தங்கள்
சங்கரர் வாழ்ந்த காலத்தில் வைதீக சமயிகளிடையே பல பிரிவுகள் காணப்பட்டன. சமயப்பிரிவுகள் காரணமாக வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. இவற்றை ஒரு வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் எனும் முயற்சியில் சங்கரர் ஈடுபட்டார். வைதீக சமயத்தை அடிப்படையாகக் கொண்ட சமயங்கள் தோற்றத்தில் வேறுபட்டாலும் கருத்து நிலையில் ஒன்று எனும் பரஸ்பரத் தொடர்பினை நிலை நாட்டினார். இந்து சமய மரபில் சமய நெறிகளின் ஆதாரம் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர் சங்கரரே எனலாம். இவர் தனது சீர்திருத்தங்களுக்கு உபநிடதங்களையே அடிப்படையாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமய சீர்திருத்தங்களைத் தனது அத்வைதக் கோட்பாட்டினூடாகவே மேற்கொண்டார்.
இவர் சமயம், சமுதாயம் என்பவற்றை முழுமை நோக்கில் சிந்தித்தவராவார். அறுவகைச் சமயப் பிரிவுகளையும் தோற்றுவித்ததால் இவர் சண்மதப் பிரதிஸ்தாபகர் என அழைக்கப்படுகிறார். சிவன், அம்மன், விஸ்ணு, சுப்பிரமணியர் முதலியோரைப் பற்றி இவர் பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்கள் சமயங்களைக் குறித்துப் பரந்த நோக்கில் பிரதிபலிக்கின்றன எனலாம்.
சங்கரர் அடிப்படையில் ஒரு வைதிக சாத்திர விற்பன்னராகவும், விமர்சகராகவும் விளங்கியவர். இவரது வாழ்க்கையும் சாதனைகளும் எடுத்துக்காட்டவே அமைகின்றன.
இவருக்கு முன்பு வேறு எவரும் அடிப்படை நூல்களை ஆதாரமாக மிக வலிமையோடு வற்புறுத்தவில்லை. வேதமென்பது உபநிடதம் என்றே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை அவர் இந்து சமய சிந்தனைகளுக்கும், தத்துவத்திற்கும் கருவூலமாகக் கொண்டார். இவருக்கு வேள்வி, சடங்கு, கிரியைகளில் பிரியமிருந்ததாகக் கருத முடியவில்லை. இவர் தசோபநிடதங்கள் பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் ஆகிவற்றிற்கு எழுதிய உரைகள் சிறப்பானவை. ஞானமார்க்கமே மேலானது என்பது இவரது கொள்கையாகும்.
சங்கரர் தனது பாண்டித்தியத்தினாலும், வாதத் திறமையினாலும் சமய வாதங்கள் புரிந்து வேதாந்தக் கோட்பாடுகளை விளங்கச் செய்தார். அத்துடன் பிறரையும் ஏற்றுக்கொள்ளச் செய்தார். பௌத்தம் இவரது கோட்பாட்டாலும் செயற்பாடுகளாலும் பெரிதும் நலிவுற்றது. எனினும் அவருடைய சிந்தனைகள் வைதீகத்தை மட்டும் பின்னணியாகக் கொண்டமையாது தனது கருத்துக்களுக்குப் பயன்படுத்தினார். இரு சமய நெறிகளையும் கடந்த ஒரு பொது நிலையையும் உருவாக்கினார். இந்து சமய தத்துவ நூல்களையும் இவர் தோற்றுவித்தார்.
பாரதகண்டத்தில் இந்து சமயத்தைப் புனருத்தாரணம் செய்தவர் இவரேயாவார். இவர் காலத்தில் மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றதோடு வட இந்தியாவில் சில பகுதிகளில் சமணமும் மேலோங்கி இருந்தது. பொது வழக்கில் பௌத்தம், இந்து சமயம் என்பன பரஸ்பர செல்வாக்கினால் கலப்புறத் தொடங்கிய போதும் பிரச்சார அடிப்படையில் தரகாறுகள் கூர்மை பெற்றன. பௌத்தர்களின் சூனிய வாதக் கோட்பாட்டை எதிர்கொள்வதும் மறுப்பதும் சங்கரரின் பொறுப்பாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் பிரமத்தின் நிலைபேறான தன்மையைப் புதிய வழியில் வலியுறுத்தினார்.
இவர் தமது சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்புவதற்குப் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் யாத்திரை செய்து புறச்சமய வாதிகளை வாதில் வென்று மடங்களை அமைத்தார்.

இராமனுஜரின் வாழ்வும் பணிகளும்
வைணவ சமய வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் உதவியவர்கள் என்ற வகையில் ஆழ்வார்களும், ஆச்சாரியார்களும் முக்கியம் பெறுகின்றனர். இவர்களுள் ஆச்சாரியார்களின் வாழ்வும் பணிகளும் ஆழ்ந்து நோக்குவதற்குரியதாகும். ஸ்ரீமத்நாதமுனிவர், உய்யக்கொண்டார், நாமக்கல் நம்பி, ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, இராமனுஜர் போன்ற பல ஆச்சாரியார்கள் வாழ்ந்துள்ளனர். இவர்களுள் இராமனுஜரின் வாழ்வும் பணிகளும் வைணவ சமய வரலாற்றில் என்றும் போற்றக் கூடியனவாக அமைந்துள்ளன.
வைணவ சமய தத்துவ உலகில் நீண்ட காலம் வாழ்ந்து உயர்ந்த சாதனை படைத்த இராமானுஜர் கி.பி 1017ம் ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் காஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆசுரிகேசவருக்கும் காந்திமதி அம்மையாருக்கும் அருமை மகனாக அவதரித்தார். இவரை ஆதிசேடனின் அவதாரமாகக் கருதி இவரின் தாய்மாமன் இவருக்கு தமிழ்மொழியில் இலட்சுமணன் எனவும் வடமொழியில் இராமானுஜர் எனவும் பெயர் சூட்டினார். இளையாழ்வார், எம்பெருமானார், லக்மாணமுனி, யதிராஜர், ஸ்ரீபாஸ்யக்காரர் உடையவர் போன்ற பெயர்களால் இவரை அழைப்பர். கருவிலேயே திருவுடையவரான இவர் ஆழ்ந்த சமய பக்தியையும் தத்துவப் பயிற்சியையும் பெற்றதோடு இறை வாழ்வையும், தேடல்களையும் மேற்கொண்டார். இவரின் முதல்குரு யாதவப்பிரகாசர் உபநிடதத்திற்கு அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்காமையால் வேறு பல குருமார்களை நாடினார் பெரியநம்பியிடம் வைணவ சித்தாந்தங்களைக் கற்றார். திருக்கோட்டியூர் நம்பியிடம் “ஓம் நமோ நாராயணநம” என்ற மந்திரதத்தைப் பெற்றுத் திருமாலை நம்பியிடம் இராமாயணம் கற்றார். மேலும் திருக்கச்சி நம்பி திருமலையாண்டான். திருவரங்கப் பெரமாள் அரையர் போன்றோரையும் தனது ஆன்மீகக் குருவாகக் கொண்டார்.
உடல், உள ஆன்மீக நிலையில் பக்குவம் பெற்ற இராமானுஜர் 18வது வயதில் தஞ்சமாம்பாள் என்ற பெண்ணைத் தனது வாழ்க்கைத் துணையாக்கினார். தனது ஆன்மீக வாழ்வுக்கு இல்லற வாழ்வு தடையாக இருப்பதை உணர்ந்து துறவற வாழ்வைக் கடைப்பிடித்தார். இராமானுஜர் விஸ்ணுவிடத்தில் ஆழ்ந்த அன்பு கொண்டு ஆன்மீக வாழ்வை மேற்கொண்டு வரும் காலத்தில் தலை சிறந்த வைணவ அறிஞரும் திருவரங்கத் தலைவருமான ஆழவந்தார் தமது இறுதிக் காலத்தில் இராமானுஜரை அழைத்து வந்து பட்டம் சூட்டி மகிழத் தமது சீடர்களை அனுப்பினார். இராமானுஜர் வந்து சேருவதற்கு முன்னர் ஆழவந்தாரின் ஆவி பிரிந்துவிட்டது. ஆழவந்தாரின் வலது கை மூன்று விரல்கள் மடக்கி இருந்தன. ஆழவந்தாரின் மூன்று நிறைவேறாத ஆசைகளை அவை குறிப்பதாகச் சீடர்கள் கூறினர். அவையாவன:

1) பிரம்ம சூத்திரத்திற்கு வைணவ முறையில் விளக்கவுரை எழுதுதல்.
2) திருவாய் மொழிக்கு விளக்கவுரை எழுதுதல்.
3) விஸ்ணு புராணத்தைத் தொகுத்து உரை கூறுதலும் அதன் புகழை நிலை . நிறுத்தலும்.

இராமானுஜர் “உன் குறை தீர்ப்பேன்” என்றதும் விரல்கள் நிமிர்ந்தன என்று கூறப்படுகின்றது. மேலும் இராமானுஜரின் இறை பணியையும் சமூகப்பணியையும் தொடர முற்பட்டபோது சோழப்பேரரசர்கள் உள்ளிட்ட பலரின் எதிர்ப்புக்கும் உட்பட்டார். எனினும் தமது அன்பாலும் இறை ஞானத்தாலும், சமூகப் பணியாலும் அனைவரையும் வென்று 120 ஆண்டுகள் வாழ்ந்து, வைணவ சமய வரலாற்றில் சிறந்த சமய வாதியாக தத்துவ வாதியாக சீர்திருத்த வாதியாக சிறப்புப் பெற்று விளங்குகின்றார் எனலாம்.

இராமானுஜரின் வைணவப் பணிகள்
இஸ்லாமிய ஆட்சிக் காலத்திற்கு முன்பு சைவநெறி முதன்மை பெற்றுக் காணப்பட்டமை கி.பி 13ம் நூற்றாண்டினைத் தொடர்ந்து இந்துசமயத்தின் வைணவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. இம் மறுமலர்ச்சியின் முன்னோடி இராமானுஜர் ஆவார். வைணவ சம்பிரதாயங்களுக்கு புத்துயிர் கொடுத்தவர் என்ற விகையில் இராமானுஜருக்கு வைணவ சமயத்தில் முக்கிய இடமுண்டு இவரின் சிந்தனைகளும் செயல்களும் வைணவ சமயத்தைச் சீர்படுத்தி அதன் மறுமலர்ச்சிக்கு உதவியது எனலாம். வைணவ சமயத்தின் நிலைக்களமாக விளங்குகின்ற ஆலயங்களின் வழிபாட்டு முறைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தினார். பல இடங்களுக்கும் யாத்திரை சென்றார். பக்தி மகிமைகளை விளக்கினார். சாதி ஏற்றத்தாழ்வைக் களைய முயன்றார் பலரையும் மதம் மாற்றினார். வைணவ நூல்களை உருவாக்கினார் தத்துவக் கொள்கைகளை உருவாக்கினார்.
திருவரங்க ஆலயத்தில் அவர் மேற்கொண்ட பல்வேறு செயற்பாடுகள் ஆலயங்களில் அவர் மேற்கொண்ட சீர்திருத்தப் பணிகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. எனலாம். மேலும் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா வரை பல இடங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். திருவரங்கம், திருப்பதி, திருவானந்தபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், துவாரகை, கர்நாடகம், கேரளம், ஆந்திரா போன்ற இடங்கள் குறிப்பிடத்தக்கவை. தான் சென்ற இடங்களில் மடங்களை நிறுவி வைணவ பக்தி நெறியை வளர்த்திருந்தார். திருவரங்கம், இராமானுஜமடம், திருநாராயணபுரம், ஜதிராஜமடம் என்பவை குறிப்பிடத்தக்கன.
விஸ்ணு பக்தி மகிமைகளைத் தான் சென்ற இடமெங்கும் பிரச்சாரம் செய்தார். ஆழ்வார்களின் பாசுரங்களை மூலமாக கொண்டே தனது பக்திச் செயற்பாட்டை மேற்கொண்டார். குறிப்பாக நம்மாழ்வாரின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். பிரபக்திக்கு முதன்மையான இடம் அளித்தார். “எம்மை முற்றாகச் சரணடைவதே முத்திக்குரிய ஒரே வழியாகும். வேறு தனிமுயற்ச்சிகள் வேண்டியதில்லை” என விஸ்ணு தன்னிடம் கூறியதாகக் குறிப்பிடுகின்றார். மகாபுராணங்களை ஞான குரவர்களிலும் மேலானதாக கொண்டார். அவற்றின் பக்திச் சிந்தனைகளைப் பரப்பினார். வைணவம் என்றால் “அது பக்தி மதம்” என்று கூறுமளவிற்கு அவரின் பக்திச் செயற்ப்பாடு அமைந்தது எனலாம்.
பக்தி நிலையில் சாதி வேறுபாடுகள் அர்த்தமற்றவை என்ற சிந்தனை உடைய இராமானுஜர் “ஒரே குலம் ஒரே சமுதாயம்” என்ற மனப்பாங்கை மக்களிடம் ஏற்படுத்தினார்.

1) விருந்தினரை உபசரிப்பதில் சாதிப்பாகுபாடு காட்டிய மனைவியைப் புறக்கணித்தமை.
2) தன்னை விடத் தாழ்ந்த சாதியைக் குருவாக ஏற்றமை. (பெரியநம்பியிடம் தீட்சை பெறுதல்)
3) தாழ்த்தப்பட்ட சாதியினரை மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலினுள் அழைத்துச் சென்றமை
4) கீழ்க்குலத்தவரைத் “திருக்குலத்தவர்” என அழைத்தமை கூரத்தாழ்வானின் மகனுக்கு “பராசுரப்பட்டர்” என்ற பெயர் சூட்டி ஆன்ம ஞானம் போதித்து மகாவித்துவானாக்கியமை.
5) “எவருக்கும் சொல்லக்கூடாது பரம ரகசியம்” என்று திருக்கோட்டியூர் நம்பி சொன்ன “ஓம் நாரயண நம” என்ற மகா மந்திரத்தை திருக்கோட்டியூர் கோபுரத்தில் ஏறி நின்று எல்லோருக்கும் கூறியமை போன்ற சம்பவங்கள் அவரின் சமத்துவ நோக்கைக் காட்டுகின்றது.

வைணவ சம்பிரதாயங்கள், பக்தி மகிமைகளை வடநாடு வரை வளர்த்துச் சென்றவர். இவரின் வழிகாட்டலில் தோன்றிய இராமனந்தா, கபிர்தாசர், துளசிதாசர் போன்றோர் வட நாட்டுப் பக்தி நெறியை வளம்படுத்தி முஸ்லிம்களிடமிருந்து வைணவத்தைக் காப்பாற்றினார். இராமானுயரின் வைணவ சமயச் பிரச்சாரம் காரணமாகச் சோழ மன்னர் உள்ளிட்ட பலரும் வைணவத்தை பின்பற்றினர் சமணம், பௌத்தம், சைவம் எனப் பல சமயப் பிரிவினரும் வைணவ ஈடுபாடு கொண்டனர்.

உதாரணம் :
கோய்ச்சால் நாட்டு சமண மன்னன் வைணவத்திற்கு மாறியமை.
திருவரங்கத்தமுதனார் வைணவராக மாறி “இராமானுஜ நூற்றந்தாதி” இயற்றியமை.
உறையூர் நாட்டு மன்னன் அகலங்கனும் அவனின் பரிவாரங்களும் வைணவத்தைப் பின்பற்றியமை.
போன்றவை குறிப்பிடத்தக்கன.
இராமனுஜர் மேற்கொண்ட வைணவப் பணிகளில் திருவரங்க ஆலயத்தில் மேற்க்கொண்ட பணிகள் முதன்மையானதாகும். தனது குருவான ஆளவந்தாரின் அழைப்பை ஏற்று காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்து நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். உய்யக் கொண்டார். மாணக்கல் நம்பி ஆளவந்தார் என்போரைத் தொடர்ந்து தனது 33 வது வயதில் திருவரங்க வைணவ ஆசாரி பீடத் தலைவரான இவர் அங்கே பல பணிகளை மேற்கொண்டார். ஆளவந்தாரின் 3 விருப்பங்களையும் நிறைவேற்றுதல் முக்கிய பணியாக இருந்தது. மேலும் “இராமானுஜ முனியே எமது விபூதியையும், லீலா வீபூதியையும் இப்பெரிய கோவிலையும் உம்முடைய உடைமையாக்குகின்றோம். இதைக் கேந்திரமாகக் கொண்டு வைணவத்தின் பெருமையைப் பாரெங்கும் பரப்புவீர்” எனச் ஸ்ரீரங்கப் பெருமானே அர்ச்சகர் உருவில் வந்து கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

1) திருவரங்கத்திலிருந்து வந்த பழைய வைகாசன அடிப்படையிலான வழிபாட்டு முறைகளை மாற்றி எளிமையான பாஞ்சராத்திர ஆகமமுறையை நடைமுறைப்படுத்தினார்.

2) ஆலயச்சுழலில் காணப்பட்ட சாதி ரீதியான ஏற்றத்தாழ்வை வெறுத்தார். பிராமணரே உயர்ந்த ஆசாரமுடையவர் என்று அங்கே நிலவி வந்த மரபைக் கண்டித்தார். “வேதங்கள் பிராமணர்களுக்குரியது இதனை ஏனையவர்கள் கற்கவோ பொருளுரைக்கவோ கூடாது” என நிலவிவந்த விதியை மாற்றியமைத்தார். திருவரங்கக் கோபுரத்தில் ஏறி நின்று எல்லோரும் கேட்க வேதம் உரைத்தார்.

3) தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார். நிர்வாகத்தில் இருந்த பலருக்கும் தமிழில் பெயர்களைச் சூட்டினார். ஆழ்வார்களின் தமிழ் மொழிப் பாசுரங்களுக்கு முதன்மை கொடுத்தார். நித்திய வழிபாட்டில் தினமும் திவ்ய பிரபந்தங்களை இசைப்பதற்கு வழிசெய்தார்.

4) வைணவ சமய உண்மைகளை எல்லோரும் அறியும் வகையில் வைணவ சமயப் பிரசங்கத்தை மேற்கொண்டார்.

5) நந்தவனம் அமைத்துச் சரீரத் தொண்டுகளில் ஈடுபட்டார்.

இவ்வாறு பல பணிகளைச் செய்து தனது இறுதிக் காலம் வரை திருவரங்கத்தில் தங்கியிருந்த இராமானுஜர் ஆலயத்தைப் போற்றி நூல்களை உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது.

தத்துவக் கொள்கை உருவாக்கம் (வேதாந்த மரபு)
உபநிடத முரண்பாடுகளை போக்கித் தெளிவினை ஏற்படுத்துவதற்காக இராமானுஜரால் முன்வைக்கப்பட்ட தத்துவக் கொள்கை விசிட்டாத்துவைதமாகும். இது சங்கரரின் அத்வைத வேதாந்தக் கொள்கைகளில் கூறப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வேதாந்த மரபில் தனிக்கென தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் ஆகிய பிரமாணங்களையும் உபநிடதம், பிரமசூததிரம், பகவத்கீதை மற்றும் வைணவ ஆகமங்கள், விஸ்ணு சார்ந்த மகா புராணங்கள், நாலாயிரந் திவ்விய பிரபந்தங்கள் போன்ற பிராமண நூல்களையும் இராமனுஜர் தனது கொள்கை உருவாக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார். பிரமசூத்திரத்திற்கு இராமனுஜரால் வழங்கிய உரை ஸ்ரீபாஷ்யம் எனப்படுகின்றது. இதுவே இவரின் தத்துவக் கொள்கையின் முக்கிய நூலாகும்.

விசிட்டாத்துவைதம் என்பத விசிட்டம் + அத்வைதம் எனப்பிரிந்து அத்வைதத்தை விசேடமாக விளக்க எழுந்த கொள்கை என்ற கருத்தைத் தருகின்றது. அதாவது ஈஸ்வரன், சித், அசித் ஆகிய முப்பொருட்களில் ஈஸ்வரனாகிய விஸ்ணுவே மேலானவர் என்பதனை விளக்கும் கொள்கை இதுவாகும். மேலும் ஈஸ்வரன் சித், அசித் ஆகிய இரண்டையும் தனது உடலாகக் கொண்டு தான் அவற்றிற்கு உயிராக இருந்து அவற்றை இயக்குகின்றான். என்ற சரீர சரீரி சம்மந்தத்தை நிலை நிறுத்துகின்ற கொள்கை இதுவாகும். முப்பொருள் உண்மையை வலியுறுத்துவதால் இதனை “தத்துவத்திரயக்கொள்கை” எனவும் முப்பொருட்களுக்கிடையே இயல்பாகவே வேறுபாடு உண்டு எனினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்று இங்கு கூறப்படுவதானால் இதனை “பேதாபேதக்கொள்கை” எனவும் அழைப்பர். இராமானுஜர் தனது தத்துவக் கருத்துக்களை
சரீர சரீரி பாவம் அல்லது அங்க அங்கித் தொடர்பு
அப்பிரத சித்திக் கொள்கை
இருவகைத் தொடர்பு
மூவகைப் பேதங்கள்
பரிணாம வாதம்
போன்ற வாதங்களினூடாக நிறுயுள்ளார். இவ்வாதங்களினூடாக முப்பொருட்களின் உண்மையைக் கூறி அவற்றுக்கிடையேயுள்ள பேத, அபேதங்களை நிலைநிறுத்துவதுடன் விஸ்ணுவுக்கு முதன்மை கொடுத்து அவ் விஸ்ணுவுடன் இரண்றக் கலப்பதே வாழ்வின் இறுதி இலட்சியம் என்பதையும் காட்டியுள்ளார். இராமானுஜரின் இத்தத்துவக் கொள்கை சைவசித்தாந்த தத்துவக் கோட்பாடு வளம்பெறத் துணையாக அமைந்ததென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மடங்கள் உருவாக்கம் (சமய நிறுவனங்கள்)
தென்னாட்டிலிருந்து வட நாடுவரை ஊரூராக ஆன்மீக யாத்திரை மேற்கொண்ட இராமானுஜர் தான் சென்ற இடங்களில் பல சீடர்களை தோற்றுவித்தார். சுதர்சனசூரி, வேங்கடநாதர், ஸ்ரீநிவாசர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இத்தகைய சீடர்களின் துணையுடன் வைணவ சமய தத்துவ வளர்ச்சிக்கு உதவும் மடங்கள் அல்லது பீடங்களை உருவாக்கினார். தமிழகமெங்கும் 70 பீடங்களை உருவாக்கி அவற்றின் மூலம் 700 சந்நியாசிகளைத் தோற்றுவித்து அவர்களை ஊரூராக வலம் வரச் செய்து வைணவ பக்தி நெறியை வளம்படுத்தினார். இவரின் சமய நிறுவனங்களின் செயற்பாட்டால் சமண, பௌத்த மதங்கள் நிலைகுலைந்தன. மேல்கோட்டை, பூரி, பிருந்தாவனம், திருவரங்கம் போன்ற இடங்களில் மடங்கள் அமைந்தன.

திருவரங்கம் - இராமானுஜமடம்
திருநாராயணபுரம் - ஜதிராயமடம்
திருவானந்தபுரம் - இராமானுஜமடம்
பூரி ஜகந்நாதம் - எம்பார்மடம்

போன்ற மடங்களின் பணிகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாகும். இம்மடங்களில் இருந்த வைணவ பெரியார்கள் சமண, பௌத்த துறவிகளுடன் வாதங்களை மேற்கொண்டு வைணவ சமய தத்துவ சிந்தனைகளினை நிலைநிறுத்தினார். பலரையும் வைணவத்திற்கு மாற்றினார். பொதுவாக வைணவ பக்தி நெறியை தென்னாட்டிலிருந்து வட நாடு வரை பரப்புவதில் இராமானுஜரால் நிறுவப்பட்ட மடங்கள் முதன்மையாகச் செயற்பட்டன. அத்துடன் சோழர் காலத்திற்குப் பின்னர் வைணவ சமய நிறுவனங்கள் பல தோற்றம் பெறுவதற்கும் இம் மடங்கள் முன்னோடியாக விளங்கின எனலாம்.

நூல்கள் உருவாக்கம்
வைணவ சமயத்தின் வளர்ச்சிக்காக இறுதிக் காலம் வரை செயற்பட்ட இராமானுஜர் வைணவ சமயத்தின் சமய, தத்துவ விடயங்களையும் பல நூல்களாக வெளிப்படுத்தி உள்ளார். பூர்வ ஆச்சாரியர்களின் பிரபந்தங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்களிலும் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர் அவற்றிலிருந்து தான் பெற்ற ஆத்மீக அனுபவங்களை, இறையியல் தத்துவங்களை நூல்களாக உருவாக்கினார்.
தனது குரு நாதரின் விருப்பப்படி பிரம சூத்திரத்திற்கு விளக்கவுரை அல்லது பேருரை செய்தார். அது ஹீபாஷ்யம் எனப்படுகின்றது. கீதையில் மிகுந்த ஈடுபாடு உடைய இவர் கீதா பாஷ்யம் என்ற நூலை உருவாக்கினார்.

வேதாந்த தீபம்
வேதாந்த சங்கிரகம்
வேதாந்த சாரம்
ஹீரங்க கத்யம்
நித்ய திருவாதனப்பாடி
கத்யத் திரயம்
சரணாகதி கத்யம்
ஹீ வைகுண்ட கத்யம்
பவதாந்த தீபம்
போன்ற நூல்களும் இராமனுஜரால் உருவக்கப் பட்டவை ஆகும். ஆழ்வார்களின் பாசுரங்கள் மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஆழ்வார்களின் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிர திவ்விய பிரபந்தங்களைத் “தென்னக திராவிட வேதம்” எனப் போற்றுகின்றார்.
மத்துவரின் மத பரிபாலனம்
கி.பி 1238ஆம் ஆண்டு, விளம்பி என்ற பெயருடைய வருடத்தில் 32 லக்ஷணங்களும் கூடிய ஒர் ஆண்-குழந்தை வேதவதி-மத்யகேஹ பட்டர் என்னும் தம்பதியினருக்குப் பிறந்தது. இக்குழந்தைக்கு வாசுதேவன் என்று பெயரிட்டு வளர்த்தனர். குழந்தை சிரிப்பும், விளையாட்டுமாய் வளர்ந்து வந்தான். ஒருநாள் மத்யகேஹ பட்டர் வாங்கியிருந்த கடனை திரும்பக் கேட்டு வந்தான் ஒருவன். அந்த சமயத்தில் மத்யகேஹ பட்டர் ஊரில் இல்லை. கடன்காரனோ கடனை திருப்பி கொடுத்தாலேயொழிய இங்கிருந்து போகமாட்டேன் என்று தொல்லை செய்கிறான். அப்போது 6 வயதே ஆன குழந்தை வாசுதேவன் வேகமாக சமயலறைக்குச் சென்று அங்கிருந்த சில புளியங்கொட்டைகளை தனது சிறுகையில் அள்ளிக் கொண்டுவந்து உனக்கு பணம்தானே வேண்டும் இதோ வாங்கிக் கொள் என்று கடன்காரன் கையில் அளிக்கிறான். புளியங்க்கொட்டைகள் எல்லாம் தங்க காசுகளாக மின்னியதாம். 7 வயதில் குழந்தைக்கு உபநயனம் செய்வித்து குருகுலத்திற்கு அனுப்பினர். குருகுலத்தில் பாடம் பயிலும் சமயத்தில் ஒரு நாள் ஓர் மலைப்பாம்பு வழியில் படுத்திருக்க, வாசுதேவன் தனது காலால் அழுந்தச் செய்தே அந்த பாம்பை கொன்றான்.

இவ்வாறாக ஒருசில அதிசயமான செய்கைகள செய்த வாசுதேவனது கைரேகைகளை பார்த்த ஒரு பெரியவர் திகைப்படைகிறார். பின்னர் அன்னை வேதவதியிடம்
"அம்மா உங்கள் திருக்குமரன் ஓர் அவதார புருஷன். முன்பு வாயுகுமாரனாக ராமயண காலத்திலும், பாண்டவர்களில் பீமனாகவும் இருந்தவர் இவர். இப்பிறவியில் சிறந்த ஞானியாக பாரதம் முழுவதும் ஒளிவிசுவார்"
என்றார். வாசுதேவனுக்கும் தனது 15ஆம் வயதிலேயே சன்யாசியாகும் எண்ணம் வந்தது. ஆனால் பெற்றோர் பாசம் அவரைக் கட்டுப்படுத்த, ஒருநாள் தன் பெற்றோரிடம், "நான் ஒரே மகனாக இருப்பதால் தானே என்னை சன்யாசம் கொள்ள தடுக்கிறீர்கள்?, உங்களுக்கு இன்னொரு மகன் பிறப்பான் அதன் பின் நான் சன்யாசம் ஏற்கிறேன் என்று கூறுகிறார். அது போலவே வேதவதி-மத்யகேஹ பட்டருக்கு இன்னொரு ஆண் மகவு பிறக்கிறது. அப்போது வாசுதேவன் வயது 16. காஷாயம் தரித்து, இல்லத்தை துறந்து உடுப்பி வந்து அச்சுதப்பிரக்ஞர் என்னும் மகானை குருவாக ஏற்கிறார். அனந்தேஸ்வரர் கோவிலில் சன்யாச தீக்ஷை அளித்து பூரணபிரக்ஞர், ஆனந்த தீர்த்தர் என்ற தீக்ஷா நாமம் பெறுகிறார்.

தனது 23ஆம் வயதில் கீதைக்கு பாஷ்யம் எழுதி, அதனை வேதவியாசரிடம் சமர்பணம் செய்வதற்காக பத்ரிநாத் சென்று, பின்னர் ப்ரம்ம சூத்திரத்துக்கும் பாஷ்யம் செய்திருக்கிறார். இவர் கன்னடம், சம்ஸ்கிருதம், தமிழ், இந்தி, உருது, தெலுங்கு, வங்காளி போன்ற மொழிகளில் நல்ல தேர்ச்சியுடன் இருந்திருக்கிறார். தசபிரகரணங்கள், உபநிஷத் விளக்கங்கள், ரிக்வேத விளக்கம், அனுவியாக்கியானம் என்று 37 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கனவிலேயே உடுப்பி கிருஷ்ணன் விக்ரஹம் தான் இருக்கும் இடம் பற்றிக் கூறி, அதனை மீட்கச் செய்து உடுப்பியில் கோவில் கட்டி எழுந்தருளுகிறார். இன்றும் இவர் ஸ்தாபித்த அஷ்ட மடங்களைச் சார்ந்த சன்யாசிகளே இங்கு பூஜை செய்கின்றனர்.


இறைவனிடம் அழியாத அன்பு கொள்வதும், எல்லாரிடமும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு காட்டுவதும், தனக்குரிய கடமைகளை பணிவுடன் செய்வதும், பக்தி உள்ளத்துடன் வாழ்வதும், வாழ்கையை நல்ல பணிகள் செய்ய அர்பணிப்பதுமே வாழ்வின் தத்துவம் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 'மத்வர்' என்று, அதாவது 'யாராலும் வெல்ல முடியாதவர்' என்று அழைக்கத் தொடங்கினர் சிஷ்யர்கள். இவர் அளித்த ப்ரம்ம ஞான தத்துவமே த்வைதம் எனப்படுகிறது. இவரது கூற்றுப்படி பரமாத்மாவும்-ஜீவாத்மாவும் என்றும் ஐக்கியமாகாது. இவரது தத்துவங்களை பின்பற்றியவர்களை மாத்வர் என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் மாத்வர்களுக்கு ஹரியும் வாயுவும் பிரதானம். ஏனென்றால் மாத்வர் ஹரிபக்தியில் சிறந்தவர், அதே சமயத்தில் அவரே வாயுகுமாரன் என்பதால்.


மாத்வர் மற்ற சன்யாசிகள் போல பிருந்தாவனப் பிரவேசம் செய்யவில்லை. 1317ஆம் வருஷம் மாக சுக்லபக்ஷ நவமியில் அனந்தேஸ்வரர் கோவிலில் தனது சிஷ்யர்களுக்கு பாடம் நடத்தும் போது திடீரென அவர் மீது புஷ்பங்களால் விருஷ்டி நடந்து அவரை மூடி ஒரு பூங்குன்று உருவாகிறது. இதை அவரிடம் பாடம் கற்ற மாணவர்கள், கோவிலுக்கு வந்தவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள். பிறகு புஷ்பங்களை விலக்கிப் பார்த்தால் மத்வரை காணவில்லை. இவர் இன்றும் பத்ரிகாஸ்ரமத்தில் வேதவியாசர் அருகில் அமர்ந்து பாடம் கேட்பதாக நம்பிக்கை. மத்வர் வாழ்ந்த வீடு, கல்வி கற்ற இடம், விளையாடிய இடம் நீராடிய குளம், மலைப்பாம்பு இறந்த இடம் எல்லாம் பாஜகம் என்ற கிராமத்தில் கர்னாடகத்தின் தென் பகுதியில் இருக்கிறது.

இவ்வாறாக மூவகை வேதாந்திகளின் வரலாறுகளும் சாதனைகளும் இன்று வரை இந்து மதத்தைச் சிறப்பிக்கின்றதெனலாம்.





உசாத்துணை நூல்கள்

சந்தானலக்ஷ்மி, “சமயம் வளர்த்த சான்றோர் – ஆதிசங்கரர்”, பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, 2006.

மீனாஷி “சமயம் வளர்த்த சான்றோர் – இராமானுஜர்”, பழனியப்பா பிரதர்ஸ் , திருச்சி, 2006.

பட்சிராஜன்.தி “சமயம் வளர்த்த சான்றோர் - வைணவம் வளர்த்த பெரியோர்”, பழனியப்பா பிரதர்ஸ், திருச்சி, 1994.

திங்கள், 21 ஜூன், 2010

Tamilish

வெள்ளி, 18 ஜூன், 2010

சோழகாலக் கட்டிடக்கலை

கி.பி 850 இல் விஜயாலய சோழன் தஞ்சாவூரை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றி சோழப்பேரரசை நிறுவினான். இவனால் நிறுவப்பட்ட இப்பேரரசு 13ம் நூற்றாண்டுவரை சுமார் 400 ஆண்டுகள் நிலைபெற்றது. வடக்கில் கங்கையையும் தெற்கில் இலங்கையையும் வென்ற சோழர்கள் தென்கிழக்காசியாவில் கடாரத்தையும் வென்று கடல்கடந்த நாடுகளிலெல்லாம் செல்வாக்குச் செலுத்தலாயினர். ஆட்சிச் சிறப்பாலும், கடல் கடந்த வாணிபத்தாலும் ஈட்டிய பெரும்பொருள் கொண்டு கோயில் திருப்பணிகளைச் செய்து சோழர்கள் பெரும்புகழீட்டினார்.. இவரிகளுடைய ஆட்சிக்காலமே அரசியல் வரலாற்றிலும், கலைவரலாற்றிலும் பொற்காலமாகத் திகழ்கிறது.

சோழகாலக் கலைவரலாற்றைப் பொதுவாக முற்காலச் சோழர்கலை, இடைக்காலச் சோழர்கலை, பிற்காலச் சோழர்கலை, என மூன்று பிரிவாகப் பிரித்து நோக்குவர். அவை வருமாறு:
1)விஜயாலயன் காலம் முதல் உத்தம சோழன் காலம்வரையுள்ள பகுதி (கி.பி. 850 – கி.பி. – 985)
2)முதலாம் இராஜராஜன் காலம் முதல் அதிராஜேந்திரன் காலம்வரையுள்ள பகுதி (கி.பி. 985 – கி.பி. 1070)
3)முதற்குலோத்துங்கன் காலம் முதல் மூன்றாம் இராஜேந்திரன் காலம் வரையுள்ள பகுதி (கி.பி. 1070 –கி.பி. 1270)
(ஏகாம்பரநாதன் 1984: 41)
முற்காலச் சோழர் காலக் கோயில்கள் சோழர் வரலாற்றை வகை செய்யுமாற்றை நோக்குங்கால் ஆரம்பகாலச் சோழர்கள் பல்லவமன்னர்கள். கையாண்ட கட்டிட மரபையே பின்பற்றிக் கட்டிடங்களை அமைத்தனர். சோழர் எழுச்சியின் ஆரம்ப காலத்தில், முதல் ஒரு நூற்றாண்டு காலம் வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. திருக்கட்டளை என்னும் இடத்திலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், நார்த்தாமலையில் உள்ள விஜயாலயன் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர்கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் திருக்கட்டளையிலும், நார்த்தாமலையிலும் உள்ளவை ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதால் அவையே சோழர்காலக் கட்டிடங்களில் காலத்தால் முந்தியவை எனலாம். இவை தவிர கடம்பர்மலை, குளத்தூர், கண்ணனூர்,கலியபட்டி, திருப்பூர், பனங்குடி போன்ற இடங்களிலும் இக்காலக் கோயில்களைக் காணமுடியும். இவற்றுடன் ஓரளவு பெரிய கட்டிடமான ஸ்ரீனிவாசநல்லூரிலுள்ள குரங்கநாதர் கோயிலும் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்படதாகக் கருதப்படுகிறது.
இன்று நிலைத்திருக்கும் ஆரம்ப சோழர் காலக் கோயில்கள் அனைத்தும் முழுமையாகக் கருங்கற்களினால் ஆனவை. இவற்றிலே முந்தைய பல்லவர் காலக் கோயில்களின் அம்சங்கள் காணப்பட்டாலும்இ அவற்றைவிட இச் சோழர் காலக் கோயில்கள் திருத்தமாகக் கட்டப்பட்டுள்ளன. இது பல்லவர் காலத்துக்குப் பின்னர் கற் கட்டிடங்களைக் கட்டுவதில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டுகிறது.
10ம் நூற்றாண்டுவரை இவர்கள் கட்டிய ஏராளமான கோயில்கள் சிறியனவாகவே உள்ளன. இவற்றுட் பெரும்பாலனவற்றைப் புதுக்கோட்டை மாவட்டத்திற் காணமுடிகிறது. பல்லவர்பாணி படிப்படியாக மாற்றிச் சோழர்பாணியாக வடிவெடுப்பதை இக்கோயில்களிற் காணலாம். இதற்கு நல்ல உதாரணமாக நார்த்தமலையிலுள்ள விஜயாலய சோழீச்வரத்தைக் குறிப்பிடலாம்.

மேற்குநோக்கி அமைந்த இக்கோயில் ஆரம்பகாலச் சோழர்பாணிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாகும். இதன் அமைப்பு அசாதாரணமானது. சதுரமான பிராகாரத்தின் உள்ளே வட்டமான கருப்பக்கிருகம் காணப்படுகிறது. கருப்பக்கிருகத்துக்கும் பிராகாரத்துக்கும் மேலேயுள்ள விமானம் போகப்போக அளவிற் குறைந்திருக்கும் நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ளது. முதல் மூன்று மாடிகளும் சதுரமாகவும், மேலேயுள்ளமாடி வட்டமாகவும் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலே குமிழ்போன்ற சிகரமும் அதற்குமேலே வட்டமான கலசலமும் காணப்படுகின்றன. (நீலகண்ட சாஸ்திரி 1966:547)

கோயிலின் முன், மூடு மண்டபம் ஒன்றுண்டு. சோழர்காலத்திற்கே தனித்துவமான சுவர்களும் அவற்றில் அழகிய வேலைப்பாடுகளும் காணப்படுகின்றன. கூரையின் உட்புறத்திற் சிறுகோயில்கள் (பஞ்சரங்கள்) உண்டு. முன்னுள்ள மண்டபத்தின் தூண்கள் பல்லவர்பாணியிலேயே உள்ளன. ஒருகாலின்மேல் மறுகாலை வைத்த தோற்றமுடைய இரு தூவாரபாலகர்கள் நுழைவாயிலில் உள்ளனர். பிரதானமான கோயிலைச் சுற்றி ஏழு துணைக்கோயில்கள் உள்ளன. ஆரம்பகாலச் சோழர் கலைப்பாணியில் இது முக்கிய அம்சமாகும். கண்ணனூரில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்ட பாலசுப்பிரமணியர் கோயிலும், பெரிதும் இந்த அமைப்பையே கொண்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோயில் அழகான சிறிய கோயிலாகும். இதுவும் மேற்படி பல்லவ பாணியையே பெரிதும் ஒத்திருக்கிறது.

கட்டிடகலை வளர்ச்சியின் அடுத்த வளர்ச்சியை சிறீநிவாச நல்லூரில் உள்ள கோரங்கநாதர் கோயிலிற் காணமுடிகிறது. இது முதலாம் பராந்தகன் ஆட்சிக்காலத்தெழுந்ததென்பர். ஆனால் பாலசுப்பிரமணியம் இது ஆதித்த சோழன் காலத்திற்குரியதென்பர். (பாலசுப்பிரமணியம் 1966:61) நாகசாமியும் இதே கருத்தைக் கொண்டுள்ளார். (1976:63) இக்கோயிலுள்ள கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம் ஆகிய உறுப்புக்கள் ஒரே காலத்திற் கட்டப்பட்டு இன்றும் சிதைவுறாமல் உள்ளன. அழவுக்கு மீறிய அலங்கார வேலைப்பாடுகளின்றி மிகவும் எளிமையான இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தூணின் மேலேயுள்ள அகன்ற பகுதியும், அதற்குமேலேயுள்ள அகன்ற பகுதியும், அதற்குமேலேயுள்ள பலகைப் பகுதியும், பல்லவபாணியிலிருந்து வேறுபட்டு காணப்படுகின்றன.

பழுவூரைத்தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த பழுவேட்டரையர்கள் பல கோயில்களைக் கட்டினர். மேலைப்பழுவூர் சுந்தரேஸ்வரர் கோயில், கீழைப்பழுவ+ர், திருவாலந்துறை. மகாதேவர் கோயில். இடைப்பழுவூர் அகத்தீஸ்வரர் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இம்மூன்றினுள் அகத்தீஸ்வரம் மிகவும் சிறப்புவாய்ந்தது. ஒரே திருச்சுற்றில் இரண்டு விமானங்கள் அமைந்துள்ளன. ஓன்று, ‘வடவாயில் ஸ்ரீகோயில்’ என்றும், மற்றது ‘ தென்வாயில் ஸ்ரீகோயில்’ என்றும் பெயர் பெறுகின்றன. இரண்டு கோயில்களும் தனிக்கற்களாலான கற்றளிகளாகும். ஒன்று சதுரமான சிகரத்தையும், மற்றது, வட்டமான சிகரத்தையும் கொண்டுள்ளன. கோபுரத்தை நோக்கியுள்ள
முகமண்டபம் மிகவும் எழிலாக அமைந்துள்ளது.
இருக்குவேளிர்கள் சோழர்களின் நெருங்கிய உறவினர்கள், இவர்கள் கொடும்பாள+ரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்தனர். இவர்களுள் ஒருவன் விக்கிரமகேசரிபூதி என்பவன். இவன் விக்கிரமகேசரீச்சுரம் எனும் கோயிலைக் கட்டினான். ஒரே திருச்சுற்றில் மூன்று விமானங்களையுடையது இக்கோயில். இவற்றை ‘விமானத்திரயம்’ எனக் கல்வெட்டுக் கூறுகின்றது. இம்மூன்று விமானங்களில் ஒன்று இப்பொழுது இடிந்து காணப்படுகிறது. மூன்று விமானங்களையும் சதுரமான சிகரத்தையும் கொண்டுள்ளன. ‘மூவர் கோயில்’ என்றும் அழைக்கப்படும் இதனுடன் காளாமுகர்களின் ஆசிரியரான மல்லிகார்சுனரின் குருமடம் ஒன்றும் இணைந்து காணப்படுகிறது.
பராந்தக சோழன் காலத்திலும் பல கற்கோயில்கள் கட்டப்பட்டன. இவை ஆதித்த சோழன் காலமரபைப் பின்பற்றியே எழுந்தன. காளஹஸ்திக்கு அருகில் தொண்டைமாநாடு என்ற இடத்தில் பராந்தகனின் தந்தையாகிய ஆதித்த சோழன் இறந்தபோது ஒருஷபள்ளிப்படையை’ பராந்தகன் நிறுவினான். பள்ளிப்படை என்பது இறந்தவர் நினைவாக எடுக்கப்படும் கோயிலாகும். பராந்தகன் காலக் கோயில்களில் புள்ளமங்கையில் அமைந்துள்ளபசுபதி கோயில் சிறப்புடையது. இது ‘பிரமபுரீஸ்வரர்’ கோயில் என்றும் திருவாலந்துறை ;மகாதேவர் கோயில்’ என்றும் அழைக்கப்பட்டது.

திருவாவடுதுறை, திருவாமாத்தூர், நங்கவரம், திருமால்புரம், எறும்பூர், காட்டுமன்னார்குடி முதலிய ஊர்களில் உள்ள கோயில்களும் பராந்தகசோழன் காத்தனவாகும். பராந்தக சோழனுக்குப் பின்னர் கண்டராதித்தர், அரிஞ்சயன் சுந்தரசோழன், உத்தமசோழன் முதலியோர் காலங்களிலும் கட்டப்பட்ட கோயில்கள் ஆதித்த சோழனது கலைமரபினை ஒத்தனவேயாகும்.
கண்டராதித்தரின் தேவியாரும், உத்தம சோழனின் தாயாருமான செம்பியன் மாதேவியார், பாடல் பெற்ற பல தலங்களைக் கற்றளிகளாக மாற்றியமைத்தார். வடக்கே காஞ்சிபுரத்திலிருந்து, தெற்கே நாகபட்டனம் வரை இவ்வம்மையார் கோயில்களை அமைந்தார். இவர் கட்டுவித்த கோயில்கள் செம்பியன்மாதேவி, கோனேரிராசபுரம், ஆடுதுறை, திருக்கோடிகாவில், குற்றலாம், திருநாரையூர், கண்டராதித்தம், விருத்தாசலம், திருவெண்ணை நல்லூர் ஆகிய இடங்களில் உள்ளன. கண்டராதித்தர் தேவரின் நினைவாக ஒரு பள்ளிப்படையையும் இவர் எடுப்பித்தார்.

செம்பியன் மாதேவியார் காலத்துக்கு முன்பு மூன்று அல்லது ஐந்தாக இருந்த தேவகோஷ்டங்கள் இக்காலத்தில் ஒன்பது முதல் பதினாறுவரை விரிவாக்கப்பட்டன.

இடைக்காலச் சோழர் காலக் கோயில்கள் சோழர் கலைப்பாணியின் சிகரமெனலாம்
சோழ மன்னர்களுள் முதலாம் இராஜராஜன் தொடக்கம் முதலாம் குலோத்துங்கன் வரையில் ஆட்சிபுரிந்த காலப்பகுதியே தென்னக வரலாற்றில் காலச்சுவடுகளை காலமாகா வண்ணம் வகைசெய்த பெருமைக்கரியது. முதலாம் இராஜராஜனும் அவனுடைய மகன் முதலாம் இராஜேந்திரனும் பற்பல நாடுகளைக் கைப்பற்றிச் சோழ சாமராச்சியத்துடன் இணைத்தனர். ஆதனாற்பெற்ற பொன்னையும் பொருளையும் கொண்டு ஈடிணையற்ற பெரும் கோயில்களைக் கட்டினர். இவர்களின் கீழிருந்த சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் கூடப் பற்பல கோயில்களை அமைக்கத் துணைநின்றனர்.

இராஜராஜன் காலம்வரை சிறிய கோயில்களே கட்டப்பட்டன. இவன் ஆட்சிபீடமேறிய பின்னரும் ஆரம்பத்தில் சிறிய கோயில்களே அமைக்கப்பட்டன. சோழ மன்னர்கள் எடுப்பித்த கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தவை முதலாம் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும். முதலாம் இராஜேந்திதர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழேச்வரக் கோயிலுமாகும். இவ்விரு கோயில்களும் பெரும்பாலும் ஒரேவிதமான அமைப்புடையனவாகும்.
சோழப் பேரரசின் மாபெரும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன் இராஜராஜ சோழன். இவன் சுந்தரசோழன் என வழங்கும் இரண்டாம் பராந்தக சோழனின் இளைய மகன். ஐப்பசிச் சதய நாளில் பிறந்தவன்; இயற்பெயர் அருண்மொழித்தேவன். பட்டப்பெயர் இராசகேசரி. தில்லைவாழ் அந்தணர்களால் இராசராசன் என்று பெயர் சூட்டப்பட்டவன். சிவபாதசேகரன், திருநீற்றுச்சோழன் முதலிய வேறு பெயர்களையும் உடைய தமிழகத்தை ஆட்சிபுரிந்த ஈடிணையில்லா மன்னனாவான். அவன் காலத்தில் ஆட்சி புரிந்த எந்த இந்திய மன்னரும் அவனுக்கு இணையாக மாட்டார்கள். வீரமும் பக்திப்பெருக்கும், கலையார்வமும் கொண்ட இவன் தன் மூச்சென தமிழையும் உயிரென சைவத்தையும் போற்றியவன் சோழர் காலத்திற்கே பொற்கால மகுடம் சூட்டியவன். இம்மன்னன் சிவபெருமான் மீது கொண்ட அதிகப் பற்றுதலின் காரணமாக தஞ்சாவூரில் மிகப்பெரிய கோயில் ஒன்றைக் கட்ட விரும்பினான். மேலும் இக்கோயில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கும் மிகப்பெரும் சாதனையாக இருக்க வேண்டுமென்றும் விரும்பினான். அவனது விருப்பப்படி இந்தக் கோயில் கட்டுவதற்குத் தேவையான கற்கள் பெரும்பான்மையாக அவன் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு வெளியில் இருந்துதான் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இக்கோயில் கோபுரம் தரைத்தளத்திலிருந்து 216 அடி உயரம் உடையது. இக்கோயில் கோபுரம் கர்ப்பக்கிரகத்திலிருந்து 190 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் எனும் ஒரே கல்லிலான வட்ட வடிவமான கல் சுமார் 80 டன் அளவுடையது. இக்கோயிலின் மூலவரான பிருகதீசுவரர் (பெருவுடையார்) லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த லிங்கத்தின் உயரம் 13 அடி. ஆவுடை எனும் லிங்கத்தின் கீழ்ப்பகுதியான வட்டவடிவமான பகுதியின் சுற்றளவு 54 அடியாக இருக்கிறது. இந்த லிங்கம் மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றங்கரையிலிருந்த ஒரு மலையில் இருந்து கல் எடுத்து வந்து செய்யப்பட்டது என்கிறார்கள். இவ்வளவு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை. இங்கு கோயிலின் முன்புறமுள்ள நந்தியும் மிகப்பெரிய அளவுடையது. இது 9 அடி நீளமும், 6 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டது. இது போன்ற நந்தி உருவம் வேறு எங்கும் இல்லை. கருவூரார் எனும் சித்தரின் அறிவுரையின்படி 10 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்தக் கோயில் முதலில் இராஜராஜ சோழன் பெயராலேயே இராஜராஜேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் நாயக்க மன்னர் காலத்தில் பெருவுடையார் கோயில் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர் 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களின் ஆளுமைக்குள் வந்த போது பிருகதீசுவரம் என்று பெயர் மாற்றமடைந்தது. இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சிறப்பான கோயில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் வளாகத்தில் பெரிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பெருவுடையார் கோயில் தவிர, வடமேற்கு மூலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும்,வடகிழக்குப் பகுதியில் வராகியம்மன் கோயில்,சண்டிகேசுவரர் கோயில், கணபதி கோயில், நடராஜர் கோயில் போன்றவைகளும், முன்பகுதியில் பெரிய நந்தி கோயிலும், கருவூரார் கோயிலும் அமைந்துள்ளன. கோயில் வளாகத்தில் சுற்றுப்புறச் சுவரின் உட்புறத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள மற்றும் பல வடிவங்களிலான 108 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் கட்டப்பட்டபோதிருந்த காலம்இ சோழராட்சியின் பொற்காலமாகும். தமிழ்நாடு முழுவதும் ஒரே குடைக்கீழ் இருந்ததுடன்இ எல்லைக்கப்பாலும் பல இடங்கள் சோழப் பேரரசின் கீழ் இருந்ததுடன்இ பெருமளவு வருவாயும் கிடைத்துவந்தது. பெருமளவு ஆள்பலமும்இ அரசனின் சிவபக்தியோடு கூடிய ஆளுமையும்இ இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டிமுடிப்பதற்குத் துணையாக இருந்தது. சோழப் பேரரசின் விரிந்துவரும் பரப்பிற்கும் வளர்ந்து வரும் வசதிக்கும் ஓங்கிவரும் அதிகாரத்திற்கும் பொருத்தமாகக் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக இந்தக் கோயிலை இராஜராஜன் கட்ட நினைத்தான் போலும் முக்கியமான கட்டடம் 150 அடி நீளம் இருக்கிறது.
இவற்றினுடைய பெருமிதத் தோற்றத்தையும் ஒருங்கிணைந்த திட்டத்தின் எளிமையான இயல்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. துணைச் சார்ந்த(யுஒயைட)மண்டபங்களும் விமானமும் அர்த்த மண்டபமும் மகாமண்டபமும் பெரிய நந்தியும் அவற்றிற்கேற்ற பொருத்தமான அளவுகளையுடைய ஒரு சுற்றுச் சுவருக்குள் அடங்கியிருக்கின்றன. இச்சுவரில் கிழக்கே ஒரு கோபுரம் இருக்கிறது. மதிலை ஒட்டி உள்பக்கமாக பல தூண்களுள்ள ஒரு நீண்ட மண்டபம் செல்லுகிறது. இது 35 உட்கோயில்களை இணைக்கிறது. நான்கு திக்குகளிலும் பல இடைவெளிகளுக்கு நடுவே கேந்திரமான இடங்களில் இந்த உட்கோயில்கள் கட்டப் பெற்றிருக்கின்றன. இரண்டாவது வெளிப் பிரகாரத்தின் வாயிலாக இருந்த இடத்தில் முன் பக்கத்தில் இரண்டாவது கோபுரம் இருக்கிறது.
முக்கிய விமானம் உத்தம வகையச் சார்ந்தது; ஆதலால் இது மிகச் சிறந்தது. இதைஇ தமிழில் மாடக்கோயில் என்றும் சொல்வார்கள். இவ்வகைக்கு முதலாவது உதாரணம் தட்சிணமேரு-கோரங்கநாதர். இது பக்கவாட்டில் 99 அடி உள்ள சதுர அடித்தளத்தில் மீது அமைந்தது. படுக்கையான பகுதிஇ நீண்டு துருத்திக் கொண்டிருக்கும். ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நடுவேயுள்ள பகுதி மற்ற பகுதிகளை விடப் பெரியது. தர மட்டத்துக்குக் கீழே இருக்கும் தளத்திலிருந்து சிகரம் வரை குடாவும் மாடமும் மாறி மாறிக் காணப்படுகின்றன. சுவரில் பதித்த தூண்கள்இ பீடத்தை அழகுபடுத்துகின்ற்ன.
கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
கோயிலின் அமைப்பு
தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால்இ கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும்இ ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லைஇ ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.
இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம்இ விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ்சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போலஇ இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போலஇ இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்குஇ தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன்இ கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன்இ படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.
மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்துஇ கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல்இ மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும்இ 4 அடி உயரமுள்ள மேடைமீதுஇ அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவேஇ தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அதுஇ தொடர்ந்துஇ மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரைஇ எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.
மற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதிஇ மண்டபத்தின் மேலே கூரை எழுப்பிஇ அதற்கும் விமனத்திற்கும்இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள்இ வரிசைக்கு நான்காகஇ உள்ளனஇ இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.
விமானத்தின் உயரம் 160 அடி. எனவேஇ இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும்இ விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம்இ கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள்இ இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போலஇ இங்கும்இ இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரைப் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.
இது கட்டடக் கலையின் புதிய தனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான்இ கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பதுஇ பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு "சைத்தியங்கள்" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போதுஇ முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போலஇ இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும்இ சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.
இது தவிரஇ அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும்இ கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில்இ அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.
சோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னானஇ சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியைஇ தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாகஇ தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது 'திருகாமக் கோட்டம்' என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.
கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம்இ கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில்இ அவன்க் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.
முதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டுஇ உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிரஇ ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.
பிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன்இ மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.
அது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்துங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பர நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் 'சுற்றாலை வளைவும்' செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.
முதலாவது இராஜராஜன் தஞ்சைப் பெரிய கோயில் மட்டுமன்றி, சித்தூர் இருங்கோளீஸ்வரம், மேற்பாடி அருஞ்சிகையீஸ்வரம், ஆற்றூர் இராஜராஜவிண்ணகரம், ஈழத்தில் பொலனறுவையில் இராஜராஜேஸ்வரம் ஆகிய கோயில்களையும் கட்டினான். முதாலம் இராஜேந்திரனும் கூழம்பந்தல் திருவொற்றியூர் ஆகிய இடங்களிலும் கோயில்களை அமைத்தான்.

முதலாவது இராசாதித்தன், கூவம் எனுமிடத்தில் திரிபுராந்த கேஸ்வரர் கோயிலையும், மன்னார் குடியில் இராஜராஜேஸ்வரத்தையும் இரண்டாம் இராஜேந்திரன் திருக்கோவலூர் திருமால் கோயிலையும், அதிராஜேந்திரன் தென்னார்க்காடு மாவட்டத்தில் சந்திரமௌலீசர் ஆலயத்தையும் அமைத்தனர்.
பிற்காலச் சோழர் கோயில்கள் சோழராட்சியின் பலவீனத்தின் குறிகாட்டியாகும். ஆம் சோழர் வலிகுன்ற அவர்களின் கலைப்படைப்பிலும் வரட்சியினைக் காணமுடியும். ஏனினும் தம் முன்னோர்களின் கலையார்வம் இவர்களிடத்தும் கடும் மழைக்கப்பின் தூறலாய், புயலின் பின்னாய அமைதி நிலையில் காணப்பட்டது எனில் மிகையில்லை.

விஜயாலயன் வழித்தோன்றிய சோழ அரசர்களுக்குப் பின்னர். கீழைச் சாளுக்கியர்- சோழர் வழிவந்த முதலாம் குலோத்துங்கன் கி. பி. 1070இல் ஆட்சிபீட மேறினான். இவனாட்சியிற் கட்டப்பட்ட கோயில்களுள் மேலைக்கடம்பூரிலுள்ள அமிர்தகடேஸ்வரர் கோயிலும். தஞ்சையிலுள்ள சூரியனார். கோயிலும், குமரி மாவட்டத்திலுள்ள சோழீச்வரர் கோயிலும் முக்கியமானவை.

பிற்காலச் சோழர்கள் அமைத்த பெருங்கோயில்களில் ஒன்றாக இரண்டாம் இராஜராஜன் எடுத்த தாராசுரம் சுந்தரேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. ஓங்கிய விமானத்துடன் மண்டபம், திருச்சுற்று, பலிபீட என்பனவும் அழகாக அமைந்துள்ளன. சோழர்காலக்கோயில்களுள் உயர்ந்ததாகவும், சிறந்ததாகவும் அமைக்கப்பட்ட கடைசிக் கோயில்கள் திருபுவனத்திலுள்ள கம்பஹரேஸ்வரர் கோயிலாகும். இதனை மூன்றாம் குலோத்துங்கன் கட்டினான். இது தஞ்சைப் பெரிய கோயிலை ஒத்ததெனினும், கங்கை கொண்ட சோழேச்சுவரத்தை விடச் சற்று உயரம் குறைந்ததாகும்.
தென்னகம் அது பொன்னகமாய் மின்னி, தேனகமாய் இனித்து, தென்றலாய்க் குளிர்ந்து, உலகம் வியந்து உவகை கொள்கிறதெனின் அதற்குக் கருத்துச்சூலேற்ற காலக் கிடைக்கையானன சோழர் காலம் காரணம் என்பது நிதர்சனமன யதார்த்தம். எனவே தென்னக கலை வளர்விலும், நிலைப்பிலும் காலத்தால் அழியாத பெருமையும் ஒருமையும் சோழர் காலத்திற்கே எனின் மிகையன்று.



உசாத்துணை நூல்கள்

1)கமலையா க.சி தமிழகக் கலைவரலாறு, சென்னை, (1990).
2)கமலையா க.சி தமிழக நுண்கலைகள், சென்னை, (1978).
3)சதாசிவபண்டாரத்தான் பிற்காலச் சோழர் வரலாறு, அண்ணாமலை,(1974)
4)நாகசாமி இரா. தமிழகக் கோயிற் கலைகள், தமிழ்நாடு அரசு 5)சுந்தரமூர்த்தி தொல்பொருள் ஆய்வுத்துறை,சென்னை,(1976).
6)நீலகண்டசாஸ்திரி தென்னிந்திய வரலாறு, கொழும்பு,(1966)
7)பாலசுப்பிரமணியம் எஸ் ஆர், சோழர் கலைப்பாணி, சென்னை, (1966)
8)வேங்கடசாமி மயிலை. சீனி. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், . சென்னை,(1956)

பிரம்ம சமாஜத்தின் சமய, சமூக சீர்திருத்தப் பணிகள்

19 ஆம் நூற்றாண்டில் பாரதம் பாருக்குள்ளே நல்ல நாடாக பாமர ஜாதியையும் படித்த ஜாதியாக்கி, சாஸ்திரம் சொல்லும் சாதிகளை சரித்திரத்தில் நீக்கி,“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” எனப் பெண்ணியம் பேணி பெருமை கொண்டது.
இத்தகு பெருமையால் இந்தியா அறியப்படுகின்றதென்றால், அதற்கு இந்திய தேசத்தின் தாய் நாகரிகமான இந்து நாகரிகம் பெற்ற சீர்திருத்தமே எனலாம். அதனைப் பெற்றுத்தந்தவர் இராஜாராம்மோகன்ராய் என நாம் பெருமை கொள்வதை விட, இந்திய மறுமலர்ச்சியின் தந்தை, இந்துமத சீர்திருத்தத்தின் முன்னோடி என இந்திய வரலாறே பெருமை கொள்வது இந்துமத சீர்திருத்தத்திற்கு கிடைத்த ஓர் கிரீடம்.
சமயம் என்பது ஓர் இனத்தின் இடதுவிழி எனின் சமூகம் என்பது வலம். இவையிரண்டும் இல்லையெனின் அந்த இனத்தின் நாகரிக வாழ்வே இருண்டு விடும். இவையிரண்டையும் ஒளி பெறச் செய்வதற்கு காலம் தோறும் கடவுள் அவதரிக்கின்றார் சீர்திருத்த வாதியாக.
இந்து சமூகத்தை ஒளிபெற்றிடச் செய்த சீர்திருத்த வாதிகளுள் இராஜாராம்மோகன்ராய் முன்னோடியாவார். இவர் தனிமனிதனாக மட்டுமன்றி 1828 இல் “பிரம்ம சமாஜம்” என்னும் சீர்திருத்த இயக்கம் ஒன்றினைத் தோற்றுவித்து அதனூடாகவும் இந்துமதத்தை உலக மதமாக நிறுத்தியவர்.
“பிரம்ம சமாஜம் என்ற சொற்தொடர் “பரம்பொருள் வழிபாட்டுச் சங்கம்” என்ற பொருளினைத் தருவதாகும் உபநிடதங்களிலே மிக ஈடுபாடு கெண்ட ராம் மோகனார் அவைகளிலே பரம் பொருளைக்குறிக்கும் பிரம்மம் என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தார்.”
என ஆய்வறிஞர் பொ.சு.மணி அவர்கள் தந்துள்ள விளக்கம் மேற்படி கருத்தை அரண் செய்வதாகும்.
இராஜாராம்மோகன்ராய் தன் சிர்திருத்த சிந்தனைகளை சமய, சமூக, கல்விப் புலங்களில் பட்டை தீட்டியவர். இதனால் இம் மூன்று துறைகளும் முன்னணி பெற்றன. இங்கு பிரம்ம சமாயத்தின் சமய சமூகப் பணிகளை ஒப்பாய்வு செய்வதே நோக்கமெனலம்.
நவீன இந்து சமய சீர்திருத்த இயக்கங்களுள் பிரம்ம சமாஜம் இந்து சமயத்தினதும்,சமூகத்தினதும் வளர்ச்சிக்குப் பல ஆக்கபூர்வமான பணிகளை ஆற்றியது. ராஜாராம் மோகன்ராய் இந்து சமயக் கருத்துக்களுடன் மேல்நாட்டுக் கருத்துக்கள், மேலைத்தேய கல்வியியல் சிந்தனைகள் முதலானவற்றையும் அடிப்படையாகக் கொண்டு தனது சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். அதாவது
“இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் நின்று அனைத்துலகப் பண்பாட்டுத் தளத்தை நோக்கி விரிந்து செல்வதாக - இந்திய தேசியத்துக்குள் சர்வ தேசியத்தை நாடுவதாகத் திகழ்வதை அவதானிக்கலாம்.”
(சுப்பிரமணியன்.நா,இந்தியச் சிந்தனை மரபு,பக்-148)

இதனால் இச்சமாஜத்தின் சீர்திருத்தக் கொள்கை:
“மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமுண்டு.”
என்பதாக அமைகின்றது. எனவேதான் பிரம்ம சமாஜத்தின் கொள்ளைகளும் பணிகளும் மேல் நாட்டவர்களாலும் வரவேற்கப்பட்டன. சான்றாக, யுடிடிந புசநபழசநை என்ற கிறிஸ்துவ தலைமைக்குரு ஒருவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய குறிப்பொன்றில்
“...அறிவிலோ தத்துவ ஞானத்திலோ அவர் (ராம்மோகனர்) குறைபாடுடையவரல்லர்… அளவையியல் அடிப்படையில் சிந்திக்கும் முறைகளில் அவர் தனிச் சிறப்புடையவராகத் தோன்றுகின்றார்… இந்துக்களின் அறிவுநலமிக்க தத்துவக் கோட்பாடுகளுக்கு இணையான கருத்துக்களை ஐறோப்பிய நூல்கள் ஒன்றிலும் காணமுடியவில்லை என்று அவர் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றார்.”
எனக் குறிப்பிடுகின்றார்.
சமயப் பணிகளில் சளைக்காத சபை பிரம்ம சமாயம் என்பதற்கு வரலாறே தக்க சாட்சி. சமயத்திற்கும் சமூகத்திற்கும் உள்ள உறவு நிலையைப் பகுத்தறிவு நோக்கில் தெளிந்து கொண்டவர் இவர். சமுதாயத்தின் ஒழுங்கு முறைகளைக் காக்கவும் ஒழுங்கு படுத்தவும் கண்டறியப்பட்ட ஒரு சாதனமே மதம் எனக் கருதி மதப்பணிகளை ஆற்றினார்.
பிரம்ம சமாஜம் இந்து சமயத்தில் காலங்காலமாக நிலவிய சீர்கேடுகளை நீக்குவதன் மூலமே பிறசமயங்களின் பரம்பலைத் தடுப்பதுடன், இந்து சமயத்தினையும் நெறிப்படுத்த முடியுமெனக் கொண்டு அதற்கேற்ப பணிகளை முன்னெடுத்தது. இந்துசமய இலக்கியங்களுள் உபநிடதங்களே உண்மையானவை, புனிதமானவை எனும் கொள்கையுடையவராக மோகன்ராய் விளங்கினார். இதனால் உபநிடதங்கள் கூறும் பரம்பொருளாகிய பிரம்மத்தை மையமாகக் கொண்டு தமது இயக்கத்திற்கும் பிரம சமாஜம் எனப் பெயரிட்டார். இது வேதங்களுக்கு முதன்மையளிக்கும். தயானந்த சரஸ்வதியின் கொள்கைக்கு முரணானது. இச்சமாஜத்தின் பிரர்த்தனை முறை: காயத்திரி மந்திரத்துடன் ஆரம்பித்தல் ,இடையில் உபநிடத சுலேகத்தோடு கூறுதல் ,முகாநிர்வாண தந்திர சுலோகத்தோடு முடிவடைதல். என்ற வகையில் அமைந்தது. மேலும் உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்ற பிரம சூத்திரம், பகவத்கீதை, அவற்றுக்கான சங்கரர், இராமானுஷர், மத்துவர் என்போரின் உரைகள் என்பனவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக பிரம சமாஜத்தின் ஆன்மீகச் செயற்பாடுகள் அமைந்தன.
இராஜாராம் மோகன்ராய் இளவயதிலிருந்தே உபநிடத சிந்தனைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார். இந்நிலைப்பாடு இந்துசமயத்தில் அதுவரை காலமும் வேரூன்றியிருந்த திருவுருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு என்பவற்றை அவர் வெறுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ராஜாராம் மோகன்ராய் சமூகத்திலிருந்து இச்சீர்கேடுகளை அகற்றுவதற்கு உபநிடதங்களையே அடிப்படையாகக் கொண்டார். உபநிடதம், அத்வைதம் என்பன வலியுறுத்துகின்ற ஒருமை வாதக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு பரம்பொருள் ஒன்றே என்னும் கொள்கையை வலியுறுத்தினார்.
வடிவமற்றதும் சகலவற்றிட்கும் அடிப்படையானதும் புலன்களாலும் மனத்தாலும் அறியமுடியாததும் அறிவுக்கும் அறிவாய் நிலைத்து நிற்பதுமான பிரம்மம் என்ற தத்துவ நிலையில் உலகின் அனைத்துச்சமயங்களின் கடவுட் கொள்கைக்குமான அடிப்படை அமைந்துள்ளதாக சான்றுகளுடன் நிரூபித்தார். அவர் எழுதிய வேதாந்தம் தொடர்பான நூல்களிலும் பிரம்மசபதி (பிரம்மத்தைப் பற்றிய ஆராய்ச்சி) என்ற தலைப்பில் வங்க மெழியிலும், டீசயாயஅயயெiஉயட ஆயபயணiநெ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்ட இதழ்களிலும் இந்த பிரமத்துவம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
அதுபோலவே உபநிடதங்கள் பரம்பொருளாகிய நிர்குணப் பிரம்மத்தை உருவமற்றதெனக் கூறுவதன் வாயிலாக பிரம்ம சமாஜமும் உருவமற்ற கடவுளையே வழிபடவேண்டும் என்று பிரச்சாரம் செய்தது. மோகன்ராய் “விக்கிரக ஆராதனை மறுப்பு” எனும் நூலில் விக்கிரக ஆராதனைக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
“விக்கிரக வழிபாடு மனித இன வரலாற்றில் இடைக்காலத்தில் புகுந்த இயற்கைக்கு மாறான பயில்நிலைகள்” என அந் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும்
“…உயிருள்ள அல்லது உயிரற்ற பொருட்கள் எதுவாக இருந்தாலும் இன்று இருப்பதாகவோ, இனிமேல் தோன்றக் கூடியதாகவோ இருந்தாலும் அவற்றை வழிபாட்டுக்குரிய பொருளாக ஏற்றுக் கொள்ளக் கூடாது…”
எனப் பிரம்ம சபையின் அறநிலையப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இராஜராம் மோகன்ராய் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயக்கொள்கைகளை நன்கு அறிந்திருந்தமையால் அவற்றுள் உள்ள பகுத்தறிவு வாத சிந்தையினை அடிப்படையாகக் கொண்டு இந்து சமயத்தை சீர்திருத்த எண்ணினார். எனினும் கிறிஸ்தவ சமயத்தவரின் தீவிர சமயப் பிரச்சாரத்தினையும், இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுவதனையும் கண்டிப்பவராகவும் விளங்கினார் இவரால் வெளியிடப்பட்ட பல நூல்கள் கிறிஸ்தவர்களின் செயற்பாடுகளைக் கண்டிக்கின்ற வகையில் காணப்படுகின்றன. அவற்றுள் யேசுநாதரின் உயிர், கிறிஸ்தவருக்கு முறையீடு ,மனிதாயதம் ,சம்வாத கௌமுதி போன்றவற்றை சிறப்பாகக் கூறலாம். இவர் தன்னுடைய உரையாடல் நடையில் அமைந்த சம்வாத கௌமுதி என்னும் நூலில் இந்துசமய உண்மைகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இவர் உலகத்தில் காணப்படும் அனைத்து சமயங்களையும் இணைத்து பொது சமயம் என்னும் கொள்கையை வெளியிட்டமை அவரது சமய சமரச உணர்வை காட்டுவதாக உள்ளது.

பிரம்ம சமாஜத்தினுடைய சமயம் சார்ந்த மற்றொரு பணியாக சமயக் கண்டனம் உள்ளது. சமயங்களின் பொருத்தமற்ற செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் இப்பணி அமைந்தது. எனவே பிரம்ம சமாஜத்தின் சமய கண்டனத்தை:
இந்து சமயக் கண்டனம்
பிற சமயக் கண்டனம்
என்னும் அடிப்படையில் இனங்காண்கின்றனர். ராஜாராம் மோகன்ராய் இந்து சமயத்தில் நிலவிய:
கன்மம் மறுபிறப்பு நம்பிக்கை
பல தெய்வ வழிபாடு, விக்கிரக ஆராதனை
அளவற்ற, பொருளற்ற சடங்குகள்
பூர்வ ஜென்ம நம்பிக்கை
மூடநம்பிக்கை
போன்றவற்றைப் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பொருந்தாதவையெனக் கண்டித்தார். அவர் தனது தற் சரிதம் என்னும் நூலில்:
‘‘நான் மேற்கொண்ட கருத்து மாறுபாடுகளிலிருந்து இந்து
சமயத்தை எதிர்க்கவில்லை. உண்மைக்கு மாறாக
நெறிக்குப் புறம்பாகக் காட்ட எழுந்த முயற்சிகளையே
எதிர்த்தேன். ’’

என்று கூறுகின்றார். அவர் இந்துசமயக் கடவுட் கோட்பாட்டின் சிறந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமயம் ஒன்றினையும், கடவுள் வழிபாட்டினையும் நிறுவுவதற்கு முனைந்தார்.
ராஜாராம் மோகன்ராயின் மறைவிற்குப் பின்பு தலைமைப் பொறுப்பை ஏற்ற தேபேந்திரநாத்தாகூர் சமாஜத்தின் சமயக்கொள்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். அவற்றுள்:
1. ஸ்மிருதிகள் மற்றும் மகாபாரதத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொண்டமை
2. சமய அனுட்டானங்களைத் திருத்தி ‘அனுஷ்டான பக்தி’ எனும் நூலை இயற்றியமை
3. பிரம்மமே பரம்பொருள் எனும் கொள்கையை மறுத்தமை
4. காளி பூசை, பூணூல் அணிதல், சாதிப்பாகுபாடு என்பவற்றை ஒதுக்கியமை
5. கிறிஸ்தவர்களுடன் கொண்டிருந்த உறவுகளைத் துண்டித்தமை
போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதனைப் போலவே பிரம்ம சமாஜத்தின் தலைமைப் பொறுப்பினை கொசுப்சந்திரசென் ஏற்றதன் பின்பு மேற் கூறப்பட்ட செயற்பாடுகளில் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. அதாவது கிறிஸ்தவ சமயத்துடன் அதிகம் தொடர்பு கொண்ட வகையில் சமாஜத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பிரம்ம சமாஜத்தின் சீர்திருத்தப் பணிகளுள் சமூகம் சார்ந்த பணிகளும் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. ராஜாராம் மோகன்ராய் ஒரு விமர்சகராக மட்டுமன்றி தன் சீர்திருத்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுத்தவராகவும் காணப்பட்டார். இந்திய சமுதாயத்தில் புரையோடியிருந்த
1. பெண் சிசுக் கொலை
2. பலதார மணம்
3. பால்ய விவாகம்
4. உடன் கட்டை ஏறுதல்
5. விதவா விவாகம் மறுப்பு
6. பெண்களுக்கு கல்வி மறுப்பு
7. பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு
8. தீண்டாமை
9. மூடநம்பிக்கைகள்
முதலான சீர்கேடுகளை சமூகத்தில் இருந்து வேரறுப்பதில் பெரும் பங்காற்றினார். ஆங்கிலேய ஆட்சியாளரும் இத்தகைய தீமைகளை அகற்றுவதில் அக்கறையின்றி இருந்தமை மறைமுகமாக அவற்றை ஆதரிப்பதாகவே அமைந்தது. இந்நிலையில் தனியொரு மனிதனாக நின்று தன்னுடைய பணிகளை மோகன்ராய் முன்னெடுத்தார். இந்துசமய சட்ட நூல்களினை ஆதாரம் காட்டி மேற்கூறிய சீர்கேடுகள் சமய அடிப்படையற்றவை என்பதனை வலியுறுத்தினார். இவர் 1822ல் வெளியிட்ட பெண்கள் சொத்துரிமைகளில் நவீன ஆக்கிரமிப்பு என்னும் நூலில் ஆண்களின் சொத்துரிமை தொடர்பான ஆதிக்கம் பெண்கள் சொத்துரிமை தொடர்பான சீர்கேடுகளுக்கு அடிப்படையான காரணம் என்பதனை விளக்கினார்.
இராஜராம் மோகன்ராயினுடைய சமூகச் சீர்திருத்தப் பணிகளுள் மிகமுக்கியமானது பெண்களைப் பெரிதும் அடிமைப்படுத்திய உடன்கட்டை ஏறுதல் என்னும் சதி வழக்கத்தினை சமுதாயத்தில் இருந்து போக்குவதற்கு மேற்கொண்ட முயற்சியாகும். 1815ம் ஆண்டு தொடக்கம் 1825ம் ஆண்ட வரையான கால எல்லையில் கிட்டதட்ட 8000 இந்துப் பெண்கள் உடன்கட்டை ஏற்றப்பட்டதாக அரசாங்கப் பதிவுகள் வெளிப்படுத்தின. இச்சதி வழக்கானது அதிகாமான இந்துப் பெண்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்களைத் தழுவுவதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டது.
இச்சீர்கேடு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும், இவ்வழக்கத்தின் கொடுமையை தெளிவுபடுத்துவதற்காகவும் மக்களிடையே தீவிரமான பிரசாரத்தினை மேற்கொண்டார். இதற்காக 1818ம் தொடக்கம் 1829ம் வருடம் வரையான காலப்பகதியில் மூன்று துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார். இந்து சமய நூல்களினை ஆதாரங்காட்டி இச்சதி வழக்கத்தின் பகுத்தறிவுக்கு பொருத்தமற்ற தன்மையை விளக்கினார். ராஜாராம் மோன்ராயின் அயராத முயற்சியினால் ஆங்கிலேய அரசாங்கம் சட்டரீதியாக உடன்கட்டை ஏறுவதனை தடைசெய்தது. பெண்டிங் பெருமகனாரின் ஆட்சிக் காலத்தின் போது 1829ம் வருடத்தில் ‘உடன்கட்டை ஏறுதல் தடைச்சட்டம்’ கெண்டுவரப்பட்டது. பெண்ணை பலாத்காரமாக உடன்கட்டை ஏற்றுவோர்கள் மட்டுமன்றி: அதற்கு துணைபோவோரும் தண்டனைக்குரியவர்கள் என்று அச்சட்டம் குறிப்பிடுகின்றது. இவற்றினைத்தவிர பெண் சிசுக்களை கொலை செய்தல், பால்யவிவாகம் போன்ற செயல்களும் தண்டனைக்குரிய குற்றங்களென இந்தச்சட்டம் கூறுகின்றது.
பிரம்ம சமாஜமும் தனது செயற்பாட்டினூடகவும் பெண்ணடிமை நிலைமையைப் போக்கி சமத்துவத்தினை வழங்கியது. 1827ல் இந்நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘பிரம சமாஜ சட்டம்’ பெண்களுக்கு எதிராக நடந்தேறிய அடக்கு முறைகளைத் தகர்த்து; அவர்களுக்கு சமூகத்தில் சம அந்தஸ்தினை வழங்கும் வகையில் அமைந்தது. இந்நிறுவனம்;
பால்ய விவாகம், பலதார மணம் என்பன தடைசெய்யப்படவேண்டும்
விதவைகளை மறுமணம் செய்வதை சமூகம் அனுமதிக்க வேண்டும்
சமூக வாழ்வியலில் பெண்களை பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்
விழிப்புணர்வுக் கூட்டங்களில் பெண்களை அதிகளவில் பங்கு கொள்ளச் செய்தல் வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டது. பெண்கள் தொடர்பான சமத்துவம், சுகந்திரம், உரிமைகள் என்பன குடும்பம், சமூகம், தேசம் என்று அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டு மெனக் கோரியது. இவ்வாறு பெண் விடுதலைக்காக குரல் கொடுத்தமையினாலேயே அறிஞர்களினால் மோகன்ராய்:
“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெண் நிலை வாதியான ஆண்”
என அழைக்கப்பட்டார். இது இராஜாராம்மோகன்ராயின் சிந்தனைகளுக்குச் சூட்டிய மகுடம் என்று கொள்ளலாம்.
மேலும் சாதி என்ற சமூக விரோத சித்தாந்தத்தை அடியோடு அகற்றியமை சாதியின் பேரால் வேதிகள் செய்யும் போலிகளை வெளிச்சப்படுத்தி சமூகத்திற்கு ஒளியூட்டியவர். பிறப்பினால் எவர்க்கும் பெருமை வராதப்பா சிறப்பு வேண்டுமெனில் நல்ல செய்கை வேண்டும் என்பதைச் செய்து காட்டினார்.
ராம்மோகனர் தம்வாழ்நாளின் இறுதியில் இங்கிலாந்து சென்று அங்கேயே 1833 இல் காலமானார். அவருக்குப் பின்னர் பிரம்ம சமாஜம் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகியது. அவர் கொண்டிருந்த இந்து மதப் பாரம்பரிய ஈடுபாடு, அனைத்துலக சமயப்பார்வை, சமூக-அரசியல் ஈடுபாடு ஆகிய ஒவ்வொன்றும் தனித்தனியாக முனைப்புப் பெற்ற சூழ்நிலைகளில் அந்த நிறுவனம் முறையே ஆதிப் பிரம்ம சமாஜம், இந்தியப் பிரம்ம சமாஜம், சாதாரண பிரம்ம சமாஜம் என
மூன்றாகப் பிளவு பட்டது. ஆதிப் பிரம்ம சமாஜம் இந்தியப் பண்பை முதன்மைப் படுத்தியது. இதற்கு மகரிÑp தேவேந்திரநாத தாகூர் தலைமை தாங்கினார். பிரம்ம சமாஜத்தின் இந்துமத அடிப்படைத் தொடர்பை விலக்கி அதனை ஓர் தனி அமைப்பாகக் காட்ட விழைந்தவர் கேசவசந்திரசேனர். இதன் விழைவே இந்தியப் பிரம்ம சமாஜம் எனலாம். ராம்மோகனர் முன்வைத்த சமூக-அரசியல் கருத்துக்களில்- குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் நலன் முதலியவற்றுள் ஈடுபாடு காட்டிய பண்டித சிவநாதசாஸ்திரி என்பார் சாதரண பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார்.
இத்தகு வரலாற்றுப் போக்கினைக் கொண்ட பிரம்ம சமாஜம் சமூக முன்னேற்றத்திற்குத் தொடுத்த பணிகள் இன்றும் நம்மிடையே நிழலாடுகின்றன. சான்றாக
கல்கத்தாவில் உள்ள இராஜாராம்மோகன்ராய் அறக்கட்டளை மூலம் தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகத்துறையை கணினி
மயமாக்குவதற்கு ரூ. 1.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்
4000 நூலகங்கள் கணினி மயமாக்கப்பட்டமை.

போன்ற செயற்பாடுகளினைக் குறிப்பிட முடியும்.
தொகுத்தும் வகுத்தும் நோக்கும் போது புதியகால இந்தியச் சிந்தனை மரபுக்கு வித்திட்ட இராஜாராம்மோகன்ராய் தனிமனிதனாகவும், சமூக இயக்கமாகவும் செயற்பட்டதன் விழைவே இந்து சமய, சமூக சீர்திருத்தம் எனலாம்.

இந்துக் கலை - சிற்பக்கலை

இந்துக்கள் இன்று நேற்றல்ல இற்றைப்படுத்த இயலாத பண்பாட்டுப் பழமையையும், பாரம்பரியத்தையும் கொண்டவர்கள். இப்பண்பாட்டு உணர்வு சமயம், கலை, தத்துவம், என்பவற்றின் கூட்டுருவாக்கம் எனலாம். இந்துக்கலை என்பது வெறும் காட்சிப்பொருளே அன்றின் கற்பனைப்பொருளே அல்ல, இந்துக்கள் தம் ஆத்ம தேடலின், ஆத்மீக தாகத்தின் வடிகால்களாகவே கலை ஞானத்தை தம் எதிர்கால தலமுறையினருக்கு விட்டுச்சென்றனர்.
இந்துக் கலைகள் அறுபத்து நான்கு என்பது மரபு. அவற்றுள் சிறந்தவை நுண்கலைகள் இவை கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என்பனவாகும். இவை ஒருகலைஞனின் உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படுபவை.
“இந்திய மக்கள் மிகத்தொன்மையான காலம் தொட்டே கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் ஆகிய நுண்கலைகளைப் பொன்னெனப்போற்றி வளர்த்து வந்திருக்கின்றனர். இக்கலைப்படைப்புக்கள் உலகையே வியக்கவைக்குமளவிற்கு கலைத்துவம் மிக்க அற்புதமான படைப்புகளாக விளங்குகின்றன என்பர் கலைவிமர்சகர்கள்” Anandu Coomaraswamy (1969;ix) எனும் கருத்து ஆழ்ந்து நோக்கற் பாலது.
இந்த நுண்கலைகளுள் தலையாயது சிற்பக்கலை. இதுவே விக்கிரகவியல் கலையின் தாயூற்று. ஆதலால் விக்கிரகவியல் கலையின் மேன்மையையும் சிறப்பையும். கூறமுற்படும்போது சிற்பக்கலையை தவிர்ப்பது பொருத்தமற்றது எனும் தன்மையால் இங்கே இரண்டையும் பற்றி ஆராய முற்படுகின்றோம்.

மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.

கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிப்பவன் சிற்பி எனப்படுவான். கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.

வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர். கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.

சிற்பாசாரிகளால் செதுக்கப்படுபவை சிற்பம், அவற்றிட்கு சிவாச்சாரியர்கள் மந்திர தந்திர, யந்திர அனுஷ்டாணங்களைச் செய்து இறைநிலைப்படுத்தும் போது எழுபவை விக்கிரகம்.
“மனிதனது உணர்வுகளை ஆத்மீகத்தின் பால் ஈடுபாடு கொள்ளச்செய்யும் முயற்சியின் ஒரு பயனாக அமைவதே திருவுருவ வழிபாடு ஆகும்”
இப்படியான் இந்நிறத்தான் இவன் இறை எனக் கூறமுடியாத, ஓர் உருவம் ஒரு நாமம், ஓர்வடிவம் இலானுக்கு பல் உருவம் பல நாமம் கற்பித்து கல்லில் செதுக்கியும் பொன், வெள்ளி, ஈயம், பித்தளை, செப்பு முதலாய உலோகத்தால் வார்த்தும் வழிபடும் முறையே விக்கிரக வழிபாடு எனலாம்.
இறை அனுபூதிமான்கள் சித்தத்தை சிவன்பால் வைத்து சித்தநிலையால் சிந்திய அருள் வாக்குகளை தன் அகக் கண்ணிலே அமர்த்தி மந்திர ஜபம் செய்து அதை மனதிலே நிறுத்தி தன்விரல் நுணிகளின் வழியே சிற்றுளி கொண்டு சிற்பத்தை பிரசவிப்பான் சிற்பி. இக்கலையில் வல்லுநரை “ஸ்தபதி” என அழைப்பர். அவனால் படைக்கப்பட்ட “விக்கிரகம்” பக்குவ நிலைப்படா ஆன்மாக்கள் கட்புலனுக்கு உட்படுத்தி பக்குவப்பட கால்கோள்கிறது.
விக்கிரகம் என்பது வி+கிரகம் எனவரும். “வி” என்பது மேலான எனவும் “கிரகம்” என்பது இல்லம் எனவும் பொருள்கொண்டு “இறைவனின் மேலான இல்லம்” எனப்பொருள் புலப்படுத்தப்படுகின்றது.
விம்பம், விக்கிரகம், மூர்த்தி பேதம், பிரதிமை, படிமம் போன்ற பல சொற்களால் திருவுருவம் அழைக்கப்படுகின்றது. “திரு” என்பது தெய்வத்தன்மை எனவும்“ உருவம்” என்பது அழகிய வடிவம் எனவும் பொருள் கொள்ளப்பட்டு “தெய்வத்தன்மை பொருந்தி அழகிய வடிவமே திருவுருவம்” ஆகும்.

“திருவுருவங்கள் இறைவனை மனத்தால் கிரகிப்பதற்கு உறுதுணையாக அமைவன அத்துடன் இறைவனைப்பற்றிய புராணங்கள் கூறும் தத்துவப் பொருள் செறிந்த தெய்வீக வரலாற்றை அறிவதற்கும் உணர்வதற்கும் பெருந்துணை புரிவன. திருவுருவங்களும் அவற்றிட்கு நிகழும் கிரியைகளும் வழிபடுவோனது உள்ளத்திலே படிப்படியாகப் பரம்பொருள் தத்துவச் சிறப்பினை உணரவைப்பன சமய அனுபவத்தை வளர்பபதற்கு அவை உதவுவன”

என்ற பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ணஐயர் அவர்களுடைய கருத்து விக்கிரகவியல் கலையின் சிறப்பினை அறிவதற்கு ஒரு மைல் கல் எனலாம்.
மேற்படி சிறப்பினை உடைய விக்கிரகக் கலைபற்றி அறிய உதவும் சான்றுகளாக தொல்பொருட் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் எனும் வரலாற்றியல் மூலாதாரங்களை ஆதாரப்படுத்த முடியும்.
மொஹாஞ்சதாரோவிற் கிடைத்த வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவைப் புலப்படுத்துகின்றது. இதன் இடதுகை நிறைய வளையல்கள் காணப்படுகின்றன. இதனது கூந்தல் மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்டுள்ளது. (Sundaram1974:13) இச் சிலை வழவழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளது. வேறுசில உருவச்சிலைகள் நடனஞ்செய்வதற்கு ஏற்றவாறு நிற்கும் கோலத்தில் அமைந்துள்ளன. இச்சிலைகள் சிவபிரானது நடனக் கோலத்தின் முன்னோடியாக அமையலாம் எனபர் றோலண்ட் (Rowland 1967;15) அனால் இது ஆராய்ச்சிக்குரியதாகும் என்பர் சுந்தரம்.
இங்கு கிடைத்துள்ள திமில் பருத்த எருது, குட்டியுடன் இருக்கும் குரங்கு, தனித்திருக்கும் குரங்கு, சிவயோகியின் வடிவம், தரைப்பெண் வடிவங்கள் என்பன அக்கால மக்களின் சிற்ப அறிவை அறிய உதவுகின்றன.
சிந்துவெளிக் கலாசாரத்தின் பின் உருக்கொண்ட வேத கால கலாசாரம் அருவ வழிபாட்டை ஆதரிப்பதால் அங்கு எத்தகைய தொல்பொருட் சான்றுகளும் கிடைத்தில.
எனினும் வேதகாலத் தெய்வங்களான சூரியன், இந்திரன் ஆகியோரது சிற்பங்கள் பாஜாவில் உள்ள பழையவிகாரையின் விறாந்தையில் உள்ளன. இதிலிருந்து மெளரியருக்கு முற்பட்ட சிற்பக்கலையின் சிறப்பை ஊகிக்க முடியும்.
வடஇந்திய வரலாற்றில் சிற்பக்கலையின் உன்னத வளர்ச்சிக்கான சான்றுகளை குப்தர்கால சிற்பங்களில் காணமுடியும் குசானர் கால லிங்க வழிபாட்டின் தொடர்ச்சியாக லிங்கத்தை ஒருமுகத்துடனும், நான்கு முகத்துடனும் படைத்து வழிபடும் மரபினைக் குப்தர்கள் பேணினர். மேலும் திருமாலை அவதாரச்சிற்பமாக வடிக்கும் மரபு இங்கேயே தோற்றம் கண்டது.
வட மதுரையில் உள்ள திருமாலின் சிற்பம், உதயகிரி குகைவாயிலில் உள்ள திருமாலின் வராக அவதார புடைப்புச் சிற்பம், பித்தரக் கோன் கோயிலில் காணப்படும் புராணக் கதை கூறும் சுடுமட் சிலைகள், தசாவதாரக் கோயிலில் நுழைவாயிலின் இருபுறமும் உள்ள கங்கை யமுனை சிற்பங்கள் என்பன குப்தர்களின் சிற்பக்கலைக்கு தக்க சான்றெனலாம்.
தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம்,கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
அ. தட்சிணாமூர்த்தி "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் தமிழர் சிற்பக்கலையின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கின்றார். அதற்காக மயிலை சீனி வேங்கடசாமி அவர்களின் பின்வரும் கருத்தை தனது நூலில் தருகின்றார்.
"நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன."
மேலும் வை. கணபதி அவர்களின் பின்வரும் குறிப்பையும் தருகின்றார்.
"நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்."
தென்னக வரலாற்றில் சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் மண், சுதை, மரம், உலோகம் என்பவற்றினால் சிற்பங்கள் ஆக்கப்பட்டமையினை அறியமுடிகின்றது. இங்கு கற்சிற்பங்கள் தோன்றவில்லை. இந்நிலையினையே சங்க மருவிய காலத்திலும் காணமுடிகின்றது.
“வழுவறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் ......”
(மணிமேகலை 21:115-116)

“மண்ணினுங் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வம் காட்டுநர்”
(மணிமேகலை 21: 25-123)
எனும் வரிகளே இதற்கு தக்க சான்று. எனினும் “சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விசயரை வென்று இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான்” எனச் சிலம்பு கூறுவதில் இருந்து (சிலப்பதிகாரம் 28:225-231) கற்சிற்பங்கள் தென்னகவரலாற்றில் அரும்புவதை அவதானிக்கலாம்.
சங்க காலத்தில் உலோகத் திருமேனிகளும் வழக்கிலிருந்தன. “இவை பொன் புனைந்த பாவைகள்” என மதுரைக்காஞ்சி (வரி;410) குறிப்பிடுகின்றது. “பொற்சிலை” பற்றிய குறிப்பு ஒன்று குறுந்தொகையிற் (292:3-4)காணப்படுகின்றது நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் தாய்க்கடவுள், நாய், கோழி ஆகிய செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் உலோகத் திருமேனிகள் இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
சங்கமருவிய காலத்திலும் மாங்காட்டு மறையவன். திரு வேங்கட மலையில் திருமாலின் கிடந்த வண்ணத்தையும் திருவரங்கத்தில் செங்கண்நெடியவன் நின்ற வண்ணத்தையும் கண்டதாகக் கூறுகின்றான். (சிலம்பு 2:11வரி 40-51)
தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. இவை உலக அரங்கில் சிற்பக்கூடம் என்ற சிறப்பினை மாமல்ல புரத்திற்கு கொடுத்ததெனலாம்.
பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி - மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.
மல்லையில் அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கமுடியும்.மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபத்தில் உள்ள மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். ஆகும்.

சிற்பக் கலைக்கு மெருகேற்றிய பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ஹன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள்,
கீழ் உள்ள சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது.

மேலும் நாயன்மார்கள் பாடலிலிலும் பல்லவர் சிற்பங்களின் பாங்கினைக் காணமுடியும்.

மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன்றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான்றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

என்ற அப்பர் பாடலடியினைச் சான்றாகக் குறிப்பிட முடியும்.

பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. சான்றாக சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை குறிப்பிட முடியும். இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது. அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.

பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.

வெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில்
வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப
சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண்
ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை
அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும்
அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

சோழர் காலத்து உலோகத் திருமேனிகள் மிக்கவாறும் 'சிரே பெர்டு'(Cire Perdu) என்னும் முறையில் வார்க்கப்பட்டவையாகும். தஞ்சையிலுள்ள சில கல்வ்வெட்டுகள் திடமாகவும்(Solid), உள்ளீடுள்ளதாகவும்(hollow) உள்ள உலோகத் திருமேனிகள் வார்ப்பது பற்றிய செய்திகளைக் கொண்டுள்ளன. தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன

இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் இந்திய நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.

இந்திய சிற்பக் கலையில் இந்து சிற்பக்கலை பற்றிய தகவல்களினை இதுகாறும் தொல் பொருட்கள் துணையுடன் அலசினோம் இனி இலக்கியம் வழி இனம்காண்போம்.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது.
இதில் கண்டவை
1) விசுவதர்மம்
2) விசுவேசம்
3) விசுவசாரம்
4) விருத்தம்
5) மிகுதாவட்டம்
6) நளம்
7) மனுமான்
8)பானு 9) கற்பாரியம்
10)சிருஷ்டம்
11) மானசாரம்
12) வித்தியாபதி
13) பாராசரியம்
14) ஆரிடகம்
15) சயித்தியகம்
16) மானபோதம்
17) மயிந்திரமால்
18) வஜ்ரம்
19) ஸௌம்யம்
20) விசுவகாசிபம்
21) கலந்திரம்
22) விசாலம்
23) சித்திரம்
24) காபிலம்
25) காலயூபம்
26) நாமசம்
27) சாத்விகம்
28) விசுவபோதம்
29) ஆதிசாரம்
30)மயமான போதம்
31) மயன்மதம்
32) மயநீதி

என்பனவாகும். இவற்றுள் பல இன்று இல்லை. இப் பட்டியலில் காணப்படும் இன்றும் புழக்கத்திலுள்ள நூல்களான மானசாரம், மயன்மதம் (மயமதம்) என்பவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டாலும், தென்னிந்திய நுல்களாகும்.

'சிற்பச் செந்நூல்' எனும் அரியதொரு நூலை உருவாக்கியிருக்கும் சிற்பக் கலைஞர் திரு.வை. கணபதி, நூலிற்கான முகவுரையில் தென்னாட்டுச் சிற்பக்கலை மரபைச் சேர்ந்த கலை நூல்களாக மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் குறிபபிடும் 32 நூல்களின் பட்டியலைத் தந்துள்ளார். மனுசாரம் என்னும் சிற்பக் கட்டடக்கலை நூல் குறிப்பிடும் 28 நூல்களில்,மானசாரம் குறிப்பிடாத 18 நூல்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளார் .
இந்த ஐம்பது நூல்களுள் பெரும்பாலானவை இன்றில்லை என்று குறிப்பிடும் சிற்பி, 'இன்று நம்மிடையே கீழ்க்கண்ட நூல்களே தங்கிவருகின்றன' என்று கூறி மயமதம், விஸ்வகர்மீயம், மானசாரம், ஐந்திரமதம்,மனுசாரம், காஸ்யபம் எனும் ஆறின் பெயர்களை மட்டுமே தந்துள்ளார். 'இவை சிறபக்கலை பற்றியும் கட்டடக்கலை பற்றியும் ஒருமித்துப் பேசும் முழு நூல்களாகும். இவற்றிற்கு வாஸ்து சாஸ்திரம் என்று பெயர்' என்கிறார்.
மானசாரம் என்பது, ஒரு சிற்பநூல் ஆகும். பண்டைக்கால இந்தியாவின் நகர அமைப்பு, கட்டிடக்கலை, படிமவியல் ஆகியவை பற்றிய விடயங்கள் இந்நூலில் எடுத்தாளப்படுகின்றன. மேற்படி துறைகள் தொடர்பாகப் பல நூல்கள் இருந்த போதும், முழுமையான நூல்கள் என்று சொல்லத் தக்கவை மிகச் சிலவே. இம் மிகச்சில முழுமையான நூல்களுள் மானசாரமும் ஒன்றாகும். சிற்பநூல்களுள் மிகவும் நீளமானது என்று சொல்லத்தக்க வகையில் 5400 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல், 70 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது ஆயினும், பெரும்பாலும் தென்னிந்திய மரபுகள் பற்றியே பேசுவதால், இது தென்னிந்தியாவிலேயே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது.
மயமதம் என்பது மிகப் பழைய காலத்தில் மயன் என்பவரால் எழுதப்பட்ட சிற்பசாஸ்திர நூலாகும். இது தென்னிந்தியாவிலேயே ஆக்கப்பட்டதாகக் கருதப்படினும், இது எழுதப்பட்ட மொழி வட மொழியாகிய சமஸ்கிருதமாகும். இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை, அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன், விக்கிரகக் கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது.
வாசுத்து சூத்திர உபநிடதம் என்பது இந்திய மரபுவழிச் சிற்பக்கலை குறித்த ஒரு பழங்கால நூல் ஆகும். 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்நூல் சமஸ்க்கிருத மொழியில் எழுதப்பட்டது. இதை எழுதியவர் பிப்பிலாடர் என்பவர். பிப்பிலாடர் நான்கு மாணவர்களின் சிற்பநூல் பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பது போன்ற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்நூல் இதன் காலத்துக்குச் சற்று முன்னும் பின்னும் எழுந்த சிற்பநூல்களிலிருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. மற்ற நூல்கள் சிற்பம் தொடர்பிலான செயல் முறைகளை விரிவாக விளக்குவனவாக அமைந்துள்ளன. ஆனால் வாசுத்து சூத்திர உபநிடதமோ சிற்பக்கலையைக் கோட்பாட்டு அடிப்படையில் விளக்குகின்றது.
சிற்ப சாத்திரம் அதர்வ வேதத்தின் ஒரு பகுதி என்னும் கருத்தைப் பல இடைக்காலச் சமசுக்கிருத நூல்கள் கூறுகின்றன. அதர்வ வேதத்தில், சிற்ப சாத்திரம்குறித்த தகவல்கள் அதிகம் இல்லை. அதர்வ வேதம் கிறித்துவுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்தது. முறையான சிற்ப நூல்களின் காலம் கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதே. எனவே இந்தப் பல நூற்றாண்டுக் கால இடைவெளியை நிரப்பும் வகையிலான சிற்ப நூல்கள் எதுவும் கிடைத்தில. வாசுத்து சூத்திர உபநிடதம் இத்தகைய ஒரு நூலாக இருக்கலாம் என்ற கருத்தை இந் நூலை முதன்முதலாகப் பதிப்பித்தவர்கள் கொண்டிருந்தனர். எனினும், இந்நூலின் உட்சான்றுகளும் வெளிச் சான்றுகளும் இந்தக் கருத்தை உறுதி செய்வதாக இல்லை எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை.
காமிகம் என்பது சமஸ்கிருதத்தில் விரும்பிய பொருள் எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

இந் நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

மயமதம் எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில்,
“காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்துள்ளது. இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும்”
எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார். இது போன்றே காரணாகமும் சிற்பக்கலை பற்றிப் பலவிடங்களில் பகர்கின்றது.
இந்திய வரலாற்றின் பக்கங்களினை உலகமே உற்று நோக்குகின்ற தென்றால் அதற்கு இந்து மதம் ஆங்கே பிறந்து, இந்துக் கலைத்துவத்தை ஆத்ம ஞான தேடலாக, உள்ளக் கிளர்ச்சியை ஊட்டும் உன்னத படைப்பாக வெளிப்படுத்தியதோடு இன்றைய விஞ்ஞான உலகே வியக்கும் விந்தையினைக் கலைக்குள் புகுத்தியமையும் ஒரு காரணமென்று கூறிவிடலாம்.

"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."

என்கிறார் “காப்ரா” எனும் அணு விஞ்ஞானி.
இவரது கூற்றின் மூலம், இந்துக் கலை அன்றும், இன்றும், என்றும் மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராய் விஞ்ஞானமாகி வியக்கும் விந்தையைத் தன்னகத்தே கொண்டுள்ள தெனலாம்.